Don't Miss!
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Sports ஹர்திக் பாண்டியா கதையை முடிக்கப் போகும் தோனி - ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் என்ன நடக்கிறது?
- News இந்த கருப்பு வெள்ளை படத்தில் யானை எங்க இருக்குனு 5 செகன்டுல கண்டுபிடியுங்க! ஈஸிதான்! ஆனாலும் கஷ்டம்
- Finance விப்ரோ: அசிம் பிரேம்ஜி, ரிஷாத் பிரேம்ஜி-க்கு மீண்டும் முக்கிய பதவி.. அடுத்த 5 வருடத்திற்கு அசைக்க முடியாது.
- Automobiles லியோ படத்தில் விஜய்யுடன் நடிச்சாரு, இப்போது விலையுயர்ந்த டொயோட்டா காரில்!! கேரள நடிகையின் புது கார்!
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
திருமணம் செய்வதாக ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை.. பைலட் மீது டிவி நடிகை பரபரப்பு புகார்!
மும்பை: தன்னைத் திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்து ஏமாற்றிவிட்டதாக விமானி மீது டிவி நடிகை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமையில் ஈடுபவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
எம்.ஜி.ஆர். 104வது பிறந்த நாள்.. தலைவி டீம் வெளியிட்ட ஸ்பெஷல் ஸ்டில்.. டிரெண்டாகும் ஹேஷ்டேக்!
இதில் சினிமா, சின்னத்திரை நடிகைகளும் அதிகமாகச் சிக்கி மாட்டிக் கொள்கின்றனர்.
பாலியல் வன்கொடுமை
இந்நிலையில், சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்து வரும் நடிகை ஒருவர், விமானி ஒருவர் மீது பரபரப்பு பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளார். இது பாலிவுட் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாலிவுட்டில் நன்றாக தெரிந்த நடிகை அவர். அந்தேரி பகுதியில் வசிக்கும் அவர் பெயரை போலீசார் தெரிவிக்கவில்லை.
சின்னத்திரை நடிகை
மாடலிங்கிலும் ஈடுபட்டு வரும் அவர், சில புகழ்பெற்ற சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். அவருக்குத் திருமண தகவல் இணையதளம் மூலம் அறிமுகமானார், ஏர் இந்தியா விமானி அக்ஷத் சேத்தி. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அக்ஷத்தும் வாக்குறுதிக் கொடுத்தார்.
நெருங்கிப் பழகினர்
இதையடுத்து இருவரும் நெருங்கிப் பழகினர். இதையடுத்து பாலியல் ரீதியாகவும் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். ஆனால் அக்ஷத், திருமணம் பற்றிய பேச்சை எடுத்ததால், நடிகையை தவிர்க்கத் தொடங்கியுள்ளார். இதனால், தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த நடிகை, மும்பை ஓஷிவாரா போலீசில் புகார் கொடுத்தார்.
மோசடி செய்தார்
அந்த புகாரில், தன்னைத் திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மோசடி செய்ததாகவும் கூறியுள்ளார். போலீசில் இதுபற்றி புகார் கொடுத்தால், கொன்றுவிடுவதாக அவர் மிரட்டியதாகவும் அந்த நடிகைத் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.