Don't Miss!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Lifestyle 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
அர்ஜுன் குடும்பத்தில் அடுத்த சோகம்.. மகளுக்கு கொரோனாவாம்.. வீட்டு தனிமையில் இருப்பதாக அறிவிப்பு!
சென்னை: நடிகர் அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யா கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்றழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
தற்போதும் முன்னணி ஹீரோவாகவும் வலம் வருகிறார். கடந்த மாதம் இவரது அக்கா மகனான கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, 39 வயதில் திடீர் கார்டியாக அரெஸ்ட்டால் அகால மரணமடைந்தார்.
சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி 4 முறை பாலியல் வன்கொடுமை.. தயாரிப்பாளர் மீது பரபரப்பு புகார்!
கதறியப்படி முத்தம்
கர்ப்பிணி மனைவியை விட்டுச்சென்ற சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம் அவர்களது குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. மருமகனான நடிகர் சிருவின் உடலை கட்டியணைத்து கதறியப்படி முத்தம் கொடுத்தார் அர்ஜுன்.
துருவாவுக்கு கொரோனா
அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை கலங்கச்செய்தது. இதனை தொடர்ந்து சிரஞ்சீவியின் தம்பியான துருவா சர்ஜாவுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஐஸ்வர்யாவுக்கு கொரோனா
இந்நிலையில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ஐஸ்வர்யாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, சமீபத்தில் எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பாதுகாப்பாக இருங்கள்
நான் ஹோம் குவாரண்டைனில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உள்ளேன், கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும், உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
தமிழில் பட்டத்து யானை
தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். அன்புடன், ஐஸ்வர்யா அர்ஜுன் என தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா தமிழில் பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சொல்லிவிடவா என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.