Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
அர்ஜுன் குடும்பத்தில் அடுத்த சோகம்.. மகளுக்கு கொரோனாவாம்.. வீட்டு தனிமையில் இருப்பதாக அறிவிப்பு!
சென்னை: நடிகர் அர்ஜுனின் மகளான நடிகை ஐஸ்வர்யா கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என்றழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜுன். கர்நாடகாவை பூர்வீகமாக கொண்ட இவர் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.
தற்போதும் முன்னணி ஹீரோவாகவும் வலம் வருகிறார். கடந்த மாதம் இவரது அக்கா மகனான கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா, 39 வயதில் திடீர் கார்டியாக அரெஸ்ட்டால் அகால மரணமடைந்தார்.
சினிமாவில் வாய்ப்பு தருவதாகக் கூறி 4 முறை பாலியல் வன்கொடுமை.. தயாரிப்பாளர் மீது பரபரப்பு புகார்!
கதறியப்படி முத்தம்
கர்ப்பிணி மனைவியை விட்டுச்சென்ற சிரஞ்சீவி சர்ஜாவின் மரணம் அவர்களது குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரியையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. மருமகனான நடிகர் சிருவின் உடலை கட்டியணைத்து கதறியப்படி முத்தம் கொடுத்தார் அர்ஜுன்.
துருவாவுக்கு கொரோனா
அந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி காண்போரை கலங்கச்செய்தது. இதனை தொடர்ந்து சிரஞ்சீவியின் தம்பியான துருவா சர்ஜாவுக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்தனர்.
ஐஸ்வர்யாவுக்கு கொரோனா
இந்நிலையில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ஐஸ்வர்யாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, சமீபத்தில் எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பாதுகாப்பாக இருங்கள்
நான் ஹோம் குவாரண்டைனில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் உள்ளேன், கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும், உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.
தமிழில் பட்டத்து யானை
தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். அன்புடன், ஐஸ்வர்யா அர்ஜுன் என தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா தமிழில் பட்டத்து யானை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனை தொடர்ந்து சொல்லிவிடவா என்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.