தடுப்பூசி ஒன்றே உயிர்காக்கும்… தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் தகவல்!
சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
Recommended Video
இந்த புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு மக்களுக்கு அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.
மேலும், பயங்கரமான இந்த நோய்க்கு தடுப்பூசியே சிறந்தது என்று கூறியுள்ளார்.

தடுப்பூசி இயக்கம்
கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்குத் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் பிரதானமானது தடுப்பூசி, பொது மக்களுக்குத் தடுப்பூசி போடுவதை ஓர் இயக்கமாக முன்னெடுத்திருக்கும் வருகிறது தமிழக அரசு.

முன்னுரிமை
செய்தித்தாள் மற்றும் பால் விநியோகம் செய்பவர்கள், மருந்தகப் பணியாளர்கள், ஆட்டோ, டாக்ஸி மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள், மின்சாரத்துறை ஊழியர்கள் உள்ளாட்சித்துறை பணியாளர்கள், பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை அளித்துள்ளது.

வரிசையில் காத்திருந்து
கொரோனாவின் வேகம் அதிகரித்ததையடுத்து தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பல இடங்களில் தடுப்பூசிக்காக வரிசையில் காத்திருக்கின்றனர் மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

தடுப்பூசி
அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், நீண்ட குழப்பங்களுக்கு பிறகு நான் கோவிட்ஷீட் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். நீங்களும் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளுங்கள். பயங்கரமான இந்த நோய்க்கு தடுப்பூசியே சிறந்தது என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











