Don't Miss!
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- News விரல் நகத்தை வச்சே.. உங்களுக்குள் மறைந்து இருக்கும் கேரக்டரை கண்டுபிடிச்சிடலாம்.. ரெடியா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
சிலர் குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகின்றனர்: உருக்கமாக பதிவிட்ட நடிகை அக்ஷரா ஹாசன்!
சிலர் குறுகிய மனப்பான்மையோடு செயல்படுவதாக அக்ஷரா கூறியுள்ளார்
Recommended Video
சென்னை: குறுகிய மனப்பான்மையுடன் சிலர் செயல்படுவது வருத்தமளிக்கிறது என அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.
நடிகை அக்ஷரா ஹாசன் தற்போது ராஜேஷ் எம்.செல்வா இக்யக்கத்தில் விக்ரம் நடிக்கும் காடம் கொண்டான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக உருக்கமான பதிவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். சமீபத்தில் என்னுடைய அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது. அதை யார் எதற்காக செய்தார்கள் என இன்னும் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரிகிறது, சில குறுகிய மனப்பான்மையுடையவர்களால், துரதிஷ்டவசமாக ஒரு இளம்பெண் பாதிக்கப்பட்டிருக்கிறாள். கவனம் பெறவேண்டும் என்பதற்காக அது கவரக்கூடிய தலைப்புடன் பகிரப்படும் போது, இன்னும் அதிக பயத்தை உண்டாக்குகிறது.
மீடூ போன்ற இயக்கங்களால் பெண்கள் தன்னெழுச்சியோடு எழும்போது இவ்வாறு நடக்கிறதென்பது மிகவும் வேதனையாக உள்ளது. தங்களின் சந்தோஷத்திற்காக ஒரு இளம்பெண்ணை தூன்புறுத்தி அதை பொதுவெளியில் பகிரும் ஆட்கள் இன்னும் இருக்கிறார்கள் எனக் காட்டுகிறது.
@MumbaiPolice @Cybercellindia pic.twitter.com/JS1lJVdD6u
— Kutty Haasan (@aksharahaasan1) November 7, 2018
என்னுடைய புகைப்படங்கள் வெளியானது தொடர்பாக நான் மும்பை போலீஸில் புகாரளித்துள்ளேன். அதற்கு காரணமானவர்களை கண்டுபிடிக்கும் வரை, நான் விடுக்கும் வேண்டுகோள் ஒன்றுதான். நாம் எல்லோரும் சுதந்திரமாகவும், ஒழுக்கமாகவும் வாழவும் வாழவிடவும் கற்றுக்கொண்டிருக்கிறோம், அதனால் இணையதள துன்புறுத்தல் தொடராது என நம்புகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.