Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
பிக்பாஸில் பங்கேற்கிறாரா பிரபல பிகில் நடிகை.. ஒரு வழியாக வந்த அதிகாரப்பூர்வ தகவல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவதாக பெயர் அடிப்பட்டு வந்த நிலையில் அது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் நடிகை அம்ரிதா அய்யர்.
Recommended Video
விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 4 நிக்ழச்சி விரைவில் தொடங்கவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது.
பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சு தொடங்கியது முதலே பல பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
நள்ளிரவில் 'அன்பான' விக்கிக்கு செல்பியோட வாழ்த்து.. கேட்டா டிவிட்டர்லயே இல்லன்றாங்க நயன்!
பலரின் பெயர்
குறிப்பாக நடிகைகள் கிரண், லக்ஷ்மி மேனன், ஷாலு ஷம்மு, அம்ரிதா அய்யர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்று வருகின்றன, மேலும் கலக்கப்போவது யாரு பிரபலம் புகழ், தீனா, ரியோ ராஜ் உள்ளிட்ட பலரின் பெயர்களும் இடம் பெற்று வருகின்றன.
பொட்டில் அடித்தாற்போல்
ஆனால் இதுவரை இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் சில பிரபலங்கள் இல்லை என்பதை பட்டென பொட்டில் அடித்தாற் போல் கூறி வருகின்றனர்.
என் பெயர் ஏன்?
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய முதலே அதிகமாக பேசப்பட்டவர் நடிகை அம்ரிதா அய்யர்தான். பிகில் படத்தில் தென்றல் என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமனார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பிக்பாஸ் குறித்து பேசிய அவர் என் பெயரை ஏன் இழுக்கிறார்கள் என கடுப்பானார்.
சன்பென்ஸாக
பின்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் லைவ் சாட் செய்தார் அம்ரிதா. அப்போது பிக்பாஸில் பங்கேற்க போகிறீர்களா என ரசிகர்கள் கேட்டதற்கு எனக்கு தெரியாது, சஸ்பென்ஸாக இருக்கட்டும் என்றார். இதனால் அவர் பிக்பாஸில் பங்கேற்க போகிறார் என்ற முடிவுக்கு வந்தனர் ரசிகர்கள்.
வதந்திகளுக்கு முடிவு
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் நான் உண்மையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. நன்றி எனக்கூறி தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏன் அப்படி சொன்னீர்கள்?
அதனை பார்த்த ரசிகர்கள் பிறகு ஏன் சஸ்பென்ஸாக இருக்கட்டும் என்றீர்கள். உங்கள் பெயர் பேசப்பட வேண்டும் என்பதற்காகவா? அப்போதே பிக்பாஸில் பங்கேற்க போவதில்லை என்று கூறியிருக்கலாமே என்று கூறி விளாசியுள்ளனர்.