Don't Miss!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- News ‛‛பெரிய டாஸ்க்’’.. அண்ணாமலையை அதிகம் நம்பும் பிரதமர்! பாஜக கலந்துரையாடலில் மோடி ஓபன்டாக்!
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Automobiles இது பஸ்ஸா இல்ல பென்ஸ் காரா? சென்னைக்கு வரப்போகும் புதிய அரசு பஸ் பற்றி தெரியுமா?
- Finance அமெரிக்காவையே அதிர வைத்த நிதி மோசடி.. கிரிப்டோ கிங் பேங்க்மேன் ஃபிரைடுக்கு 25 ஆண்டுகள் சிறை
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
மூக்கை புத்தகத்தினுள் புதையுங்கள்… உலகம் இன்னும் சிறப்பாக இருக்கும்… ஆண்ட்ரியா அட்வைஸ் !
சென்னை : முன்னணி நடிகையான ஆண்ட்ரியான பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கி உள்ளதாக கூறியுள்ளார்.
அரண்மனை3, நோ என்ட்ரி , வட்டம் , மாளிகை, கா, பிசாசு 2 என அரை டசன் படங்களை கைவசம் வைத்துள்ள ஆண்ட்ரியா.
டார்சன் ஜோ லாரா விமான விபத்தில் சிக்கி உயிரிழந்தார்!
இந்த ஊரடங்கில் புத்தகங்களுடன் பொழுதை கழித்து வருகிறார்.
முன்னணி நடிகை
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக் கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை,வடசென்னை,தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான பிடங்களில் நடித்துள்ளார்.
ஆலோசனை
சமூக அக்கறையில் ஆர்வம் கொண்ட இவர் நடிப்பைத் தாட்டி அவ்வப்போது பல கருத்துக்களை தனது சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஆண்ட்ரியா, கொரோனா நோயாளிகள் அதிலிருந்து மீண்டு வர பல ஆலோசனையும் வழங்கினார்.
Recommended Video
பொன்னியின் செல்வன் படிக்கிறேன்
புத்தகம் வாசிப்பதில் தனது கவனத்தை திரும்பி உள்ள ஆண்ட்ரியா, என் பெற்றோர் எங்களை திரைப்படங்களுக்கு அழைத்து செல்ல மாட்டார்கள். ஆகையால் நான் சிறுமியாக இருந்த போது என் மூக்கை ஒரு புத்தகத்தினுள் நுழைந்தேன். அப்போதிலிருந்து உலகை கண்டுபிடிக்க வாசிப்பதே ஒரே வழி என்பதை அறிந்தேன். இது எனக்கு பிடித்த சில புத்தகங்களின் தொகுப்புதான் இது, இன்னும் பல புத்தகங்கள் உள்ளன. புத்தகம் வாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும், தற்போது வலிமை மிக்க பொன்னியின் செல்வன் புத்தகத்தை படிக்க தொடங்கி இருக்கிறேன்.
குழந்தைகளை பழக்குங்கள்
பெற்றோர் தங்கள் பிள்ளைகளிடம் ஐ பேட்டை ஒரு கதை புத்தகமாக மாற்றிக்கொடுங்கள், அது உண்மையில் குழந்தையின் கற்பனையை வளர்ப்பதற்கு வழி செய்யும். மற்றவர்களின் வாழ்க்கையில் மூக்கை நுழைப்பதை விட நாம் புத்தகத்திற்குள் மூக்கை நுழைந்தால் சிறப்பாக இருக்கும் என்று அந்த பதிவில் நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.