Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
கிளம்பி விட்டார்கள்.. ஓவர் எமோஷ்னல் ஆன ஆண்ட்ரியா.. ரொம்ப மிஸ் பண்ணுவதாக உருக்கம்!
சென்னை: நடிகை ஆண்ட்ரியா தன் மனதுக்கு நெருக்கமானவர்கள் இடத்தை காலி செய்துவிட்டதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் ஆவார். நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் வலம் வருகிறார்.
வட சென்னை படத்திற்கு பிறகு சினிமாவில் அதிகம் தலைக்காட்டாத இவர் தற்போது விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
சத்யராஜ் நடித்த மிக முக்கியமான படம் .... சினிமா வாழ்க்கையில் தனக்கு கிடைத்த வரம்
அடுத்தடுத்து படங்கள்
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளதால் இவர் யாருக்கு ஜோடி என இதுவரை உறுதியாக தெரியவில்லை. தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார் ஆண்ட்ரியா. லாக்டவுன் நேரத்தில் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர்.
ஆண்ட்ரியா உருக்கம்
தொடர்ந்து கேக் செய்வது, விதவிதமாக சமைப்பது என கலக்கல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் வொர்க்கவுட் செய்வது, யோகா செய்வது என ரசிகர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா ரொம்பவே உருக்கமாக ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.
வீட்டை காலி செய்து..
அதாவது இன்று காலை நான் எழுந்த போது தேனீக்கள் அவர்களின் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்பியிருந்ததை பார்த்தேன். ஒரு வித்தியாசமான இழப்பு உணர்வால் நான் கடக்கப்படுகிறேன். என் ஜன்னல் வழியாக அவர்கள் ஒலிப்பதை நான் இழப்பேன்.. இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் தேனிக்கள் இல்லாத வெறும் கூடு மட்டும் உள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
அவர்களுக்கு யார் பொறுப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் வீட்டு தோட்டத்தில் தேனீக்கள் கூடுகட்டியுள்ளன. அவற்றின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு.. புலம் பெயர் மக்களுக்கு யார் பொறுப்பு என கேட்டு தேனீக்கள் நிரம்பியிருந்த கூட்டின் போட்டோவை ஷேர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.