Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கிளம்பி விட்டார்கள்.. ஓவர் எமோஷ்னல் ஆன ஆண்ட்ரியா.. ரொம்ப மிஸ் பண்ணுவதாக உருக்கம்!
சென்னை: நடிகை ஆண்ட்ரியா தன் மனதுக்கு நெருக்கமானவர்கள் இடத்தை காலி செய்துவிட்டதாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவர் ஆவார். நடிகையாக மட்டுமின்றி பின்னணி பாடகியாகவும் வலம் வருகிறார்.
வட சென்னை படத்திற்கு பிறகு சினிமாவில் அதிகம் தலைக்காட்டாத இவர் தற்போது விஜயின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.
சத்யராஜ் நடித்த மிக முக்கியமான படம் .... சினிமா வாழ்க்கையில் தனக்கு கிடைத்த வரம்
அடுத்தடுத்து படங்கள்
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளதால் இவர் யாருக்கு ஜோடி என இதுவரை உறுதியாக தெரியவில்லை. தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார் ஆண்ட்ரியா. லாக்டவுன் நேரத்தில் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக உள்ள நடிகைகளில் ஆண்ட்ரியாவும் ஒருவர்.
ஆண்ட்ரியா உருக்கம்
தொடர்ந்து கேக் செய்வது, விதவிதமாக சமைப்பது என கலக்கல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் வொர்க்கவுட் செய்வது, யோகா செய்வது என ரசிகர்களை ஊக்கப்படுத்தியும் வருகிறார். இந்நிலையில் நடிகை ஆண்ட்ரியா ரொம்பவே உருக்கமாக ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.
வீட்டை காலி செய்து..
அதாவது இன்று காலை நான் எழுந்த போது தேனீக்கள் அவர்களின் வீட்டை காலி செய்துவிட்டு கிளம்பியிருந்ததை பார்த்தேன். ஒரு வித்தியாசமான இழப்பு உணர்வால் நான் கடக்கப்படுகிறேன். என் ஜன்னல் வழியாக அவர்கள் ஒலிப்பதை நான் இழப்பேன்.. இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் தேனிக்கள் இல்லாத வெறும் கூடு மட்டும் உள்ள போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
அவர்களுக்கு யார் பொறுப்பு
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் வீட்டு தோட்டத்தில் தேனீக்கள் கூடுகட்டியுள்ளன. அவற்றின் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு.. புலம் பெயர் மக்களுக்கு யார் பொறுப்பு என கேட்டு தேனீக்கள் நிரம்பியிருந்த கூட்டின் போட்டோவை ஷேர் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.