கன்னத்தில் ஓங்கி ஒரு அறைவிட்ட நடிகை.. சோகத்துடன் கணவர் பகிர்ந்த வீடியோ.. ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
சென்னை: பிரபல நடிகை தனது கணவருக்கு பளார் விட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியில் வெளியான தால் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் அனிதா ஹசானந்தனி. ஐஸ்வர் ராய் நடித்த இந்தப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார் அனிதா ஹசானந்தனி.
தெடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தமேலும் சாமுராய், சுக்ரன், மகாராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

நாகினி சீரியல்
சினிமா மட்டுமின்றி சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார் அனிதா ஹசானந்தனி. இந்தி மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். புகழ் பெற்ற நாகினி சீரியலிலும் நடித்துள்ளார் அனிதா ஹசானந்தனி.
ஆண் குழந்தை
இந்நிலையில் நடிகை அனிதா ஹசானந்தனி கடந்த 2013 ஆம் ஆண்டு, ரோகித் ரெட்டி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அண்மையில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.
ரீல்ஸ் பிடிக்காது
இந்நிலையில், நடிகை அனிதா ஹசானந்தனி, தனது கணவரை கன்னத்தில் அறையும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அனிதாவின் கணவர் ரோகித் ரெட்டி, இதனால் தான் தனக்கு ரீல்ஸ் பிடிக்காது என சோகத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

அடிச்சு அடிச்சு விளையாடலாமா?
இதனை தொடர்ந்து அனிதா ஹசானந்தனியும் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு வீடியோ ஷேர் செய்துள்ளார். அதில் இது ஒரு சந்தோஷமான சன்டே, இந்த அறை கொடுக்க நான் எத்தனை டேக்ஸ் எடுத்தேன் என ஐடியா இருக்கிறதா என கேட்டுள்ள அனிதா, தனது கணவரையும் இதுபோல் வீடியோ தினந்தோறும் ஷூட் செய்யலாமா என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











