Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பொல்லாத உலகில் பயங்கர கேம்... இணைந்த மூன்று அழகிகள்
சென்னை: நடிகை ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கும் பப்ஜி திரைப்படத்தில் தற்போது புதிதாக மேலும் மூன்று நாயகிகள் இணைந்துள்ளனர். கேரளாவை சேர்ந்த அனித்ரா நாயர், பெங்களூரை சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாந்தினி ஆகியோர் தான் அந்த மூன்று நடிகைகள். இப்படம் வெளியான பின்பு இவர்கள் மூவருக்கும் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சாருஹாசனை வைத்து தாதா 87 படத்தை டைரக்ட் செய்த இயக்குனர் விஜய். ஸ்ரீஜி யின் அடுத்த படமான பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) படத்தில் பிக் பாஸ் சீசன் 2 புகழ் ஐஸ்வர்யா தத்தா நாயகியாக நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. மிகுந்த பொருட்செலவில் காமெடி த்ரில்லராக இப்படம் தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விக்ரமின் மருமகன் அர்ஜூமன், பிக் பாஸ் சீசன் 1 புகழ் ஜூலி, மொட்டை ராஜேந்திரன் ஆகியோரும் நடிக்கின்றனர் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தில் நடிக்கும் மற்ற மூன்று நடிகைகள் யார் என்பதை படக்குழு அறிவித்துள்ளது.
கோலிவுட் போல பாலிவுட்டில் கொடுப்பதில்லை -காஜல் அகர்வால்
கேரளாவை சேர்ந்த அனித்ரா நாயர், பெங்களூரை சேர்ந்த நிவேதா பட்டுலா மற்றும் தமிழகத்தை சேர்ந்த சாந்தினி ஆகியோர் பப்ஜி படத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் அழகைப் பார்த்து கோடம்பாக்கமே வாயடைத்துப்போய் உள்ளதாம். இந்தப் படம் வெளியான உடன், நிச்சயமாக இம்மூன்று நாயகிகளுக்கும் கோலிவுட்டில் பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும் படவாய்ப்புகள் குவியும் என்றும் சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
தற்போது மொபைல் ஃபோன்களில் விளையாடும் ஆபத்தான பப்ஜி விளையாட்டைப் போலவே, மரண பயத்தை ஏற்படுத்தும் அதிபயங்கர விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்த விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்கு இறுதியில் ஒரு பரிசு காத்திருக்கிறது. முடிவில் என்ன நடக்கிறது என்பது தான் சஸ்பென்ஸ். இதனால் தான் இப்படத்திற்கு பப்ஜி (பொல்லாத உலகில் பயங்கர கேம்) என்று பெயரிட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.