Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
காதலன் பேச்சை கேட்டு நடிகை அஞ்சலி ஆடுகிறார்- சித்தியின் முதல் ரகசியம் வெளியீடா?
சென்னை: காதலன் பேச்சை கேட்டு நடிகை அஞ்சலி என் மீது புகார் சொல்கிறார் என அவரது சித்தி பாரதி தேவி அஞ்சலி மீது குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
கோடிக்கணக்கான தனது சொத்துகளை இயக்குனர் களஞ்சியமும், தனது சித்தி பாரதிதேவியும் அபகரித்துவிட்டதாக நடிகை அஞ்சலி நேற்று பரபரப்பாக பேட்டி அளித்தார். இது குறித்து பாரதிதேவி இன்று நிருபர்களிடம் விளக்கமளித்தார்.
அக்கா மகளே... ரத்தினமே.
அஞ்சலி எனது அக்காவின் மகள்தான். 4 வயதாக இருக்கும்போது அஞ்சலியை நான் தத்தெடுத்துக்கொண்டேன். அவரது அம்மா வெளிநாட்டில் வீட்டு வேலை செய்வதற்காக சென்றுவிட்டார். எனது அம்மாதான் அஞ்சலியை வளர்த்தார்.
ரொம்ப ஒண்ணும் சம்பாதிச்சுடல...
சினிமாவில் அஞ்சலிக்கு கோடிக்கணக்கில் சம்பளம் கிடைத்துவிடவில்லை. அவர் அதிகபட்சமாக ரூ.25 லட்சம் தான் சம்பளமாக வாங்கினார்.
ஆர்யா தான் பர்ஸ்ட் பெரிய ஹீரோ...
இதுவரை அவர் பெரிய நடிகர்களுடன் நடித்ததில்லை. இப்போதுதான் ஆர்யாவுடன் நடித்திருக்கிறார்.
இருந்தாதானே அபகரிக்க...
கோடிக்கணக்கில் அவர் சேர்த்த சொத்தை நான் அபகரித்துவிட்டதாக சொல்லி இருக்கிறார். அவர் சம்பளத்தில் ரூ.30 லட்சம் ரூபாயை அவரது அம்மாவிடம் கொடுத்திருக்கிறேன். அஞ்சலிக்கும் ரூ.50 லட்சம் தருவதாகவும், பிளாட் தருவதாகவும் கூறினேன்.
காதல் படுத்தும் பாடு...
எனக்கும் அஞ்சலிக்கும் எந்த விரோதமும் இல்லை. ஆனால் அஞ்சலி அவரது காதலன் பேச்சை கேட்டுக்கொண்டு என் மீது குற்றச்சாட்டு சொல்கிறார். அவரது காதலன் யார் என்று எனக்கு தெரியாது.
அஞ்சலியே கதி...
என் குடும்பம், கணவரைவிட்டு நான் இதுநாள் வரை அஞ்சலிக்கு துணையாக இருந்தேன். அஞ்சலியின் அம்மாவுக்கு என்னால் ஆபத்து என்று கூறுகிறார். ஆனால் அவரது அம்மா இந்த தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.
அம்மா வரட்டும்... அப்புறம் மீதி
என்னை சந்திக்க இன்று குடும்பத்தினருடன் அஞ்சலி அம்மா சென்னைக்கு வருகிறார். அஞ்சலி பற்றிய மேலும் பல விவரங்களை பிறகு சொல்கிறேன். இவ்வாறு பாரதிதேவி கூறினார்.
-
சோனியா அகர்வால் பிறந்தநாள்.. அவரது சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?.. சிங்கிளா இருந்தாலும் கெத்துதான்
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?
-
Aadujeevitham Review: ஆடுஜீவிதம் ட்விட்டர் விமர்சனம்.. மலையாளத்தில் இருந்து இன்னொரு உலக சினிமா!