சிவகார்த்திகேயனின் வளர்ச்சி சிலருக்கு பிடிக்கல.. இமான் இதை சொல்ல என்ன காரணம்.. நடிகை பளீச்!
சென்னை: சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காத சிலரின் தூண்டுதலின் பேரில் தான் இமான் இப்படி சொன்னார் என்று நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இமான், சிவகார்த்திகேயனுடன் இந்த ஜென்மத்தில் சேர்ந்து பயணிக்க மாட்டேன். அவர் எனக்கு செய்தது மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டார்.

பல விஷயங்களை நான் மூடி மறைக்கிறேன் என்றால் அதற்கு காரணம் என் குழந்தைகளின் எதிர்காலம் தான் என்று பேட்டியில் கூறியிருந்தார்.
சிவகார்த்திகேயன்-இமான்: இமானின் இந்த பேட்டி இணையத்தில் பெரும் புயலை கிளப்பியது. மேலும், இமான் முதல் மனைவி மோனிகாவை விவாகரத்து செய்ய சிவகார்த்திகேயன் தான் காரணம் என்று சோசியல் மீடியாவில் செய்தி பரவியது. நெட்டிசன்கள் அவர் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
நடிகை அனுபரமி: இந்த விஷயம் குறித்து நடிகை அனுபரமி யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் குழந்தைகளின் எதிர்காலம் வீணாகி விடும் என்று நினைக்கும் இமான், விவாகரத்து செய்துவிட்டு, வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டபின் இப்போது இதுகுறித்து பேச என்ன அவசியம் இருக்கிறது.
நோக்கம் என்ன: சிவகார்த்திகேயன் மேல் தவறு இருக்கிறதா? இல்லையா என்று எதுவுமே தெரியாமல் ஒரு தரப்பினர் அவர் மீது வன்மத்தை கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். தொகுப்பாளராக இருந்து கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். வளர்ந்து வரும் ஒரு நடிகர் மீது இப்படி ஒரு அசிங்கத்தை சுமத்துவதற்கான நோக்கம் என்னவாக இருக்கும்.

தூண்டிவிட்டு: சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பிடிக்காத சிலர் இமானை தூண்டிவிட்டு இதனை செய்துள்ளார். இமானுக்கு தனது குழந்தை மீது இருக்கும் பாசத்தால் சிவா செய்த துரோகத்தை வெளியில் சொல்லவில்லை என்று சொன்னார். அப்போ, சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் இல்லையா... அவர்களின் எதிர்காலம் என்னஆகும். யாராக இருந்தாலும் தயவு செய்து அந்தரங்க விஷயத்தை வெளியில் சொல்லாதீர்கள் என்று நடிகை அனுபரமி அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











