இது மிகவும் சோதனையான காலம்… அனுஷ்கா உருக்கமான பதிவு !

சென்னை : இந்த சோதனையான காலத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியுடன் இருப்போம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதவிவை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் நேற்று 1,55 ,382 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், 23,310 பேருக்கு கொரேனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

வேகம் எடுக்கும் கொரோனா

வேகம் எடுக்கும் கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு சற்று குறைவாக பதிவாகி இருந்தது.

4 லட்சத்தை கடந்தது

4 லட்சத்தை கடந்தது

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்வடைந்து உள்ளது.

167 பேர் பலி

167 பேர் பலி

தமிழகத்தில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மொத்த பாதிப்பு 12,72,602பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 167 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.

மற்றவர்களுக்கு உதவுங்கள்

மற்றவர்களுக்கு உதவுங்கள்

இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நாம் தற்போது சந்தித்து வருவது மிகவும் சோதனையான காலம், இதில், நாம் ஒருவருக்கு ஒருவர் உதவியுடன் இருப்போம், அரசு கூறியுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டில் அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள். மேலும், உங்களால் மற்றவர்களுக்கு முடிந்தளவு உதவுங்கள், நாம் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்து இத்தொற்றிலிருந்து மீண்டுவருவோம் எனத் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X