Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இது மிகவும் சோதனையான காலம்… அனுஷ்கா உருக்கமான பதிவு !
சென்னை : இந்த சோதனையான காலத்தில் ஒருவருக்கு ஒருவர் உதவியுடன் இருப்போம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதவிவை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் நேற்று 1,55 ,382 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஒரு இழப்பு.. வார்த்தையே வரலை.. நடிகர் பாண்டு மரணம்.. திரைத்துறை பிரபலங்கள் உருக்கம்!
இதில், 23,310 பேருக்கு கொரேனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
வேகம் எடுக்கும் கொரோனா
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களாக கொரோனாவின் பாதிப்பு சற்று குறைவாக பதிவாகி இருந்தது.
4 லட்சத்தை கடந்தது
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 4 லட்சத்து 12 ஆயிரத்து 262 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 410 ஆக உயர்வடைந்து உள்ளது.
167 பேர் பலி
தமிழகத்தில் 23,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன் மூலம் மொத்த பாதிப்பு 12,72,602பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 167 பேர் நேற்று மட்டும் உயிரிழந்துள்ளனர்.
மற்றவர்களுக்கு உதவுங்கள்
இந்நிலையில், நடிகை அனுஷ்கா தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நாம் தற்போது சந்தித்து வருவது மிகவும் சோதனையான காலம், இதில், நாம் ஒருவருக்கு ஒருவர் உதவியுடன் இருப்போம், அரசு கூறியுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டில் அனைவரும் பாதுகாப்புடன் இருங்கள். மேலும், உங்களால் மற்றவர்களுக்கு முடிந்தளவு உதவுங்கள், நாம் ஒன்றிணைந்து பிரார்த்தனை செய்து இத்தொற்றிலிருந்து மீண்டுவருவோம் எனத் தெரிவித்துள்ளார்.