Don't Miss!
- News இது என்ன ஜனநாயகம்.. தேர்தல் நேரத்தில் காங்கிரஸ் நிதி முடக்கப்படுகிறது.. தலைவர்கள் குமுறல்
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Sports 8 வருஷமாக ஆர்சிபிக்கு தொடரும் சோகம்.. கேகேஆர் செய்த மாஸ் சம்பவம்.. வரலாற்றை மாற்றுவாரா விராட் கோலி?
- Automobiles வெறும் 1 மணி நேரத்தில் சென்னைல இருந்து பெங்களூர் போயிரலாம்! உலகையே மிரள வைக்கும் புல்லட் ரயில் சீறி பாய போகுது
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அப்ப ஷீர்டி... இப்ப சிவராத்திரி... சிறப்பு பூஜையில் அமைதியாகக் கலந்துகொண்ட நடிகை அனுஷ்கா
சென்னை: நடிகை அனுஷ்கா மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்துவருகிறார்.
ஹீரோவுக்கு இணையாக, படத்தைத் தாங்கி செல்லும் ஹீரோயின்களில் இவரும் ஒருவர். இவர் நடித்துள்ள நிசப்தம் படம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
சம்பளத்துல ஒரு பகுதியை திரும்பித்தரணும் ஆமா... நடிகை த்ரிஷாவுக்கு பிரபல தயாரிப்பாளர் எச்சரிக்கை
தொடரும் கிசு கிசு
இவரும் பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸூம் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருவரும் அதை மறுத்து வருகின்றனர். இருந்தாலும் அவர்கள் பற்றிய கிசு கிசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நடிகை அனுஷ்காவுக்கு இப்போது வயது 38.
கோயில்களுக்கு
இவர் கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வருகிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. திருமணத்துக்காகத்தான் அவர் இப்படி கோயில் கோயிலாகச் செல்வதாகக் கூறப்பட்டது. அவருக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் அதுபற்றி பேச்சு எழவில்லை.
கிரிக்கெட் வீரர்
கடந்த மாதம் கூட, அவர் ஷீர் சாய்பாபா கோயிலுக்குச் சென்ற புகைப்படங்கள் வெளியாயின. இந்நிலையில், அவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வந்தது. வட இந்திய கிரிக்கெட் வீரரான அவர், தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார் என்று கூறப்படுகிறது.
மகா சிவராத்திரி
அவரைதான் கடந்த சில வருடங்களாக அனுஷ்கா காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதை வழக்கம்போல அனுஷ்கா மறுத்திருந்தார். இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அவர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். எந்த கோயிலில் இந்த வழிபாட்டை நடத்தினார் என்ற விவரங்கள் அந்தப் புகைப்படத்தில் இல்லை. இது வைரலாகி வருகிறது.
-
Godzilla x Kong: The New Empire Review: காட்ஸில்லா அண்ட் காங் விமர்சனம்.. ஆர்ஆர்ஆர் மாதிரி இருக்கே!
-
Rajinikanth: தமிழ் புத்தாண்டில் ரஜினி படங்களின் அடுத்தடுத்த அப்டேட்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!
-
சிம்பிளாக நடந்து முடிந்த விவேக் மகள் திருமணம்.. கல்யாணத்தில் நடந்த செம விஷயம் என்ன தெரியுமா?