Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அப்ப ஷீர்டி... இப்ப சிவராத்திரி... சிறப்பு பூஜையில் அமைதியாகக் கலந்துகொண்ட நடிகை அனுஷ்கா
சென்னை: நடிகை அனுஷ்கா மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜையில் கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ், தெலுங்கில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருக்கிறார் அனுஷ்கா. இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடித்துவருகிறார்.
ஹீரோவுக்கு இணையாக, படத்தைத் தாங்கி செல்லும் ஹீரோயின்களில் இவரும் ஒருவர். இவர் நடித்துள்ள நிசப்தம் படம் ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
சம்பளத்துல ஒரு பகுதியை திரும்பித்தரணும் ஆமா... நடிகை த்ரிஷாவுக்கு பிரபல தயாரிப்பாளர் எச்சரிக்கை
தொடரும் கிசு கிசு
இவரும் பிரபல தெலுங்கு ஹீரோ பிரபாஸூம் காதலித்து வருவதாக கடந்த சில வருடங்களாக செய்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருவரும் அதை மறுத்து வருகின்றனர். இருந்தாலும் அவர்கள் பற்றிய கிசு கிசு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நடிகை அனுஷ்காவுக்கு இப்போது வயது 38.
கோயில்களுக்கு
இவர் கடந்த சில மாதங்களாக குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று வருகிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. திருமணத்துக்காகத்தான் அவர் இப்படி கோயில் கோயிலாகச் செல்வதாகக் கூறப்பட்டது. அவருக்கு மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் கூறப்பட்டது. பின்னர் அதுபற்றி பேச்சு எழவில்லை.
கிரிக்கெட் வீரர்
கடந்த மாதம் கூட, அவர் ஷீர் சாய்பாபா கோயிலுக்குச் சென்ற புகைப்படங்கள் வெளியாயின. இந்நிலையில், அவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வந்தது. வட இந்திய கிரிக்கெட் வீரரான அவர், தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடி வருகிறார் என்று கூறப்படுகிறது.
மகா சிவராத்திரி
அவரைதான் கடந்த சில வருடங்களாக அனுஷ்கா காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. இதை வழக்கம்போல அனுஷ்கா மறுத்திருந்தார். இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு அவர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். எந்த கோயிலில் இந்த வழிபாட்டை நடத்தினார் என்ற விவரங்கள் அந்தப் புகைப்படத்தில் இல்லை. இது வைரலாகி வருகிறது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே