Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திருமணத்துக்கு மறுத்த காதலன் மீது திராவகம் வீசிய நடிகை!
தெலுங்கு டெலிவிஷன் தொடர்களில் நடித்து வருபவர் நடிகை டிம்பிள். இவர் ஆராதனா உள்ளிட்ட சில தொடர்களில் நடித்துள்ளார். இவருக்கும் தெலுங்கு டெலிவிஷன் தொடர்களில் நடித்து வரும் ஸ்ரீதர் வர்மா என்ற நடிகருக்கும் காதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் ஸ்ரீதர் வர்மா ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக் சிட்டிக்கு படப்பிடிப்புக்காக சென்ற போது அவர் மீது மர்ம நபர் ஒருவர் திராவகத்தை வீசி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீதர் வர்மா சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பாக ஸ்ரீதர் வர்மா போலீசில் அளித்த புகாரில், இந்த தாக்குதலை நடிகை டிம்பிளின் உதவியாளர் நாகராஜு என்பவர் நடத்தி இருக்கலாம் என சந்தேகிப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, ஸ்ரீதர் வர்மா தாக்கப்பட்ட மறு நாள், தன்னை சிலர் பிளேடால் தாக்கியதாகக் கூறி நடிகை டிம்பிள் போலீசில் புகார் செய்தார்.
இந்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி, நடிகர் ஸ்ரீதர் வர்மா மீது திராவகம் வீசியதாக நாகராஜுவை கைது செய்தனர்.
அவரிடம் போலீசாரிடம் நடத்திய விசாரணையில் இந்த தாக்குதலின் பின்னணியில் நடிகை டிம்பிள், அவரது உதவியாளர் மணி ஆகியோர் இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
தனக்கும் ஸ்ரீதர் வர்மாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளாக பழக்கம் இருந்து வந்ததாகவும், ஆனால் அவர் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதால் ஆத்திரத்தில் அவர் மீது திராவகம் வீச ஏற்பாடு செய்ததாகவும் நடிகை டிம்பிள் தனது வாக்குமூலத்தில் தெரிவித்து இருப்பதாக போலீசார் கூறினார்கள்.
மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் டிம்பிள் மீது சந்தேகம் வராமல் இருக்கவும், போலீசாரை திசை திருப்பவும் அவர் தன் மீது லேசாக பிளேடு மூலம் தாக்குதல் நடத்த ஏற்பாடு செய்த திடுக்கிடும் தகவலும் விசாரணையில் தெரிய வந்தது.
நடிகை டிம்பிள், அவரது உதவியாளர்கள் மணி, நாகராஜு ஆகியோர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தான் தாக்கப்பட்டதாக கூறி போலீசை திசை திருப்ப முயன்றதாக டிம்பிள் மீது மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு 14 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னது விக்ரம் நடித்த மெகா ஹிட் படத்தில் நடிக்க வேண்டியது அந்த நடிகரா?.. செமயா இருந்திருக்குமே
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!