Don't Miss!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நரிகளின் சதிகளுக்கு நாய்கள் சாயலாம்.. ஆனால் சிங்கம் சாயாது.. குண்டு ஆர்த்தி குமுறல்!
சென்னை: கூட்டுச் சதி செய்து எங்களது அம்மாவை சிறையில் அடைத்துள்ளனர். ஆனால் நரிகளின் சதிகளுக்கு நாய்கள் சாயலாம், ஆனால் சிங்கம் சாயாது. கூடாரத்தை சாய்க்கலாம்.. ஆனால் ஜெயலலிதா கோட்டை. அதிலிருந்து ஒரு கல்லைக் கூட அசைக்க முடியாது என்று நடிகையும், அதிமுக பேச்சாளருமான குண்டு ஆர்த்தி கூறியுள்ளார்.
திரையுலக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட குண்டு ஆர்த்தி கோபமாகவும், அதேசமயம் நிதானமாகவும் பேசினார்.
மக்கள் நலனே தன்னலன்
டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியின்போது, தமிழக மக்களின் நலனே தன்னலன் என்று திட்டங்களை அறிவித்து, மக்கள் நன்றாக இருக்க வேண்டும், எல்லாரும், எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை என்ற நிலை வர வேண்டும் என்று போராட்டமே வாழ்க்கையாக வாழ்பவர் ஜெயலலிதா.
எங்களது மகாலட்சுமி
இந்த நவராத்திரி சமயத்தில், எங்களது மகாலட்சுமியை, எங்களது துர்க்கையம்மனை, எங்களது அம்மாவை சிறையில் வைத்துள்ளதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.
என்றுமே அவர்தான் முதல்வர்
பிறக்கப் போகும் குழந்தை முதல் வயதானவர்கள் வரை அனைவருக்கும் திட்டங்களை அறிவித்து மக்களின் அன்பைப் பெற்றவர் ஜெயலலிதா. மக்களைப் பொறுத்தவரை என்றுமே அவர்தான் நிரந்தர முதல்வர்.
வயிற்றெரிச்சல்
மக்களிடம் அவர் நல்ல பெயரைப் பெற்று விட்டதைப் பொறுக்க முடியாமல் பொறாமையால், வயிற்றெரிச்சலால் அவர் மீது வீண் பழி போட்டு சிறையில் அடைத்து முடக்க நினைக்கிறார்கள்.
நாய்கள் சாயலாம்... சிங்கம் சாயாது
ஆனால் நரிகளின் சூழ்ச்சிகளுக்கு நாய்கள் சாயலாம், ஆனால் சிங்கத்தை அசைக்க முடியாது. கூடாரத்தை அசைக்கலாம். ஆனால் அம்மா கோட்டை. அதில் ஒரு செங்கல்லைக் கூட அசைக்க முடியாது.
அழிவார்கள்
எல்லோருக்கும் அவர் அம்மா, இது தமிழ்நாடு அல்ல, தாய்நாடு, அம்மா நாடு. அவரை அழிக்க நினைப்பவர்கள்தான் அழிந்து போவார்கள். இது வர லாறு.
பீனிக்ஸ் பறவை போல
10 மாதம்தான் ஒரு தாய் தனது கருவைச் சுமக்கிறாள். ஆனால் அம்மா, தனது மனதில் மக்களை குழந்தைகளாக நினைத்து நிரந்தரமாக சுமக்கிறார். ஒரு பீனிக்ஸ் பறவை போல எங்களது அம்மா மீண்டு வருவார்.
மக்களுக்காக துடிப்பார்
என்னதான் அவரைப் பாடுபடுத்தினாலும், அவரது இதயம் எப்போதும் மக்களைச் சார்ந்தே இருக்கும். மக்களுக்காகவே துடிக்கும்.
தமிழ்நாடே ஜெயலலிதாவுக்கு வாரிசு
தனக்கு வாரிசு இல்லை என்று ஜெயலலிதா கவலையேப் படவேண்டாம். ஒட்டுமொத்த தமிழ்நாடும் அம்மாவின் வாரிசுதான் என்றார் ஆர்த்தி.