Just In
- 5 min ago
காடன் படம் நடிச்ச கையோடு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. நடிகர் ராணா டகுபதி கலகல பேட்டி!
- 11 min ago
வர வர டிரெஸ் குறைஞ்சுக்கிட்டே போகுதே.. ஸ்ட்ராப்லெஸ் கவுனில் ஓவர் கிளாமர் காட்டும் பிக்பாஸ் ஜூலி!
- 48 min ago
ரஜினியுடன் அந்தப் படத்தில் நடித்து 33 வருஷம் ஆச்சு.. பழைய போட்டோக்களை பகிர்ந்த சீனியர் நடிகை!
- 1 hr ago
650 கோடி விவகாரம்.. அனுராக், டாப்சியை வச்சு விளாசும் கங்கனா ரனாவத்.. வேற யாரும் வாயே திறக்கல!
Don't Miss!
- News
100 நாட்களை தொட்ட விவசாய போராட்டம்.. கையில் எடுக்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றம்.. மார்ச் 8ல் விவாதம்
- Sports
ஜெர்ஸி நம்பரில் இப்படி ஒரு விளையாட்டா.... குறும்புக்கார ஹர்பஜன்... உண்மையை உடைத்த லக்ஷ்மணன்
- Lifestyle
உங்க ராசிப்படி பெற்றோராக நீங்கள் செய்யப்போகும் தவறு என்ன தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!
- Finance
வீடு கட்ட,வாங்க இது தான் சரியான நேரம்.. வட்டியை குறைத்த மற்றொரு வங்கி.. வட்டி எவ்வளவு தெரியுமா?
- Automobiles
கோபக்கார பூனையால் சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய விமானம்... பாவம் அந்த பைலட்... என்ன நடந்தது?
- Education
TNPSC 2021: ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரி சேர்க்கைகான அறிவிப்பு வெளியீடு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது லவ் மேரேஜ் இல்லையாம்.. சிவகார்த்திகேயன் பட ஹீரோயினுக்கு நாளை திருமணம்.. ரசிகர்கள் வாழ்த்து!
கொச்சி: சிவகார்த்திகேயன் பட ஹீரோயினின் திடீர் திருமணம் நாளை காலை நடக்கிறது.
எழில் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த படம், 'மனம் கொத்தி பறவை'.
இந்தப் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் மலையாள நடிகை ஆத்மியா.

போங்கடி நீங்களும்
இந்தப் படத்தைத் தொடர்ந்து, ராமகிருஷ்ணனுடன், போங்கடி நீங்களும் உங்க காதலும் என்ற படத்தில் நடித்தார். மலையாளத்தில் விஜய் சேதுபதி நடித்த மார்கோனி மத்தாய், சூப்பர் ஹிட்டான ஜோசப் உட்பட சில படங்களில் நடித்தார். இப்போது அவியல் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

வெள்ளை யானை
தமிழில், சுப்ரமணிய சிவா இயக்கத்தில், சமுத்திரகனியுடன் வெள்ளை யானை என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் கொரோனா காலத்தில் கால்சென்டரில் பணிபுரிந்து மக்களுக்கு சேவை செய்தார். இந்நிலையில் இவருக்குத் திடீரென திருமணம் முடிவாகி உள்ளது.

கப்பலில் பணிபுரிகிறார்
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சனூப் என்பவருடன் திருமணம் பேசி முடிக்கப் பட்டுள்ளது. சனூப் கப்பலில் பணிபுரிகிறார். இவர்கள் திருமணம் கண்ணூரில் நாளை காலை நடக்கிறது. இது காதல் திருமணம் அல்ல என்றும் பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம் என்றும் கூறப்படுகிறது.

திருமண வரவேற்பு
அங்குள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நாளை மறுநாள் திருமண வரவேற்பு நடக்கிறது. இதில் திரையுலகினர் மணமக்களை வாழ்த்துகின்றனர். திருமணத்திற்கு பிறகும் ஆத்மியா தொடர்ந்து நடிக்க, சனூப் சம்மதம் சொல்லி இருக்கிறாராம். இதனால் அவர் தொடர்ந்து நடிப்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவருக்கு சமூக வலைதளங்களில் இப்போதே ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.