Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
திருமதியாகிறார் தாமிரபரணி பானு.. கொச்சியில் நிச்சயதார்த்தம்
திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகை பானு என்கிற முக்தாவின் திருமண நிச்சயதார்த்தம், நேற்று கொச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் எளிமையாக நடைபெற்றது.
தமிழில் தாமிரபரணி படத்தில் விஷாலின் ஜோடியாக அறிமுகமான நடிகை பானு, தொடர்ந்து 3 பேர் 3 காதல் மற்றும் தேசிங்குராஜா போன்ற படங்களில் நடித்தார்.
தொடர்ந்து தமிழில் பெரிய அளவில் படங்கள் இல்லை எனவே தாய் மொழியான மலையாளக் கரையோரம் சென்று அங்கெ தனது நடிப்பைத் தொடர்ந்தார்.
படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது மலையாள பின்னணி பாடகி ரிமிடோமியின் சகோதரர் ரிங்கு டோமிக்கும் நடிகை பானுவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதைதொடர்ந்து இரு வீட்டாரின் பெற்றோர்கள் இருவரும் இணைந்து பேசி பானு- ரிங்கு டோமியின் திருமணத்தை முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று கொச்சியில் உள்ள ஒரு கிறிஸ்தவ ஆலயத்தில் நடிகை பானு-ரிங்கு டோமிக் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. எளிமையான முறையில் நடந்த இந்த நிச்சயதார்த்தத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டும் பங்கேற்றனர்.
நடிகை பானு - ரிங்கு டோமிக் திருமணம் வருகிற 30-ந்தேதி கேரள மாநிலம் எடப்பள்ளியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெறுகிறது. இதில் மலையாள பட உலகினர் பலரும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
ஓணம் முடிந்து அடுத்த 2 தினங்களில் திருமணம் நடக்கவிருப்பதால் இப்பொழுதே களை கட்டத் தொடங்கியிருக்கிறது பானுவின் திருமண ஏற்பாடுகள்.
பானு ரிங்குவைப் பார்த்த போது "இந்தப் பாடலை பாடியிருப்பாரோ வெள்ளிக்கிழமை பத்தரை பன்னெண்டு உன்னப் பார்த்தேனே அந்த ராகு கால நேரம் எனக்கு நல்ல நேரமே".