திலீப்பின் கள்ளக்காதலை மஞ்சுவிடம் போட்டுக் கொடுத்த நடிகை பாவனா
திருவனந்தபுரம்: நடிகர் திலீப் நடிகை காவ்யா மாதவனுடன் நெருங்கிப் பழகியதை நேரில் பார்த்த நடிகை பாவனா அதை அவரின் அப்போதைய மனைவியான மஞ்சுவிடம் போட்டுக் கொடுத்தார். இதனால் திலீப் தனது 2வது திருமணத்திற்கு பாவனாவை அழைக்கவில்லை.
நடிகர் திலீப் தனது காதல் மனைவியான நடிகை மஞ்சு வாரியரை விவாகரத்து செய்தார். அதற்கு காரணம் நடிகை காவ்யா மாதவன் என்று கூறப்பட்டது. இந்நிலையில் திலீப் காவ்யாவை திருமணம் செய்துள்ளார்.
திருமணத்திற்கு அவர்கள் நடிகை பாவனாவை அழைக்கவில்லை.

தொடர்பு
நடிகர் திலீப்புக்கும், காவ்யா மாதவனுக்கும் இடையே தொடர்பு இருந்துள்ளது. திலீப் தனது மனைவி மஞ்சுவுக்கு தெரியாமல் காவ்யாவுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

துபாய்
காவ்யா தனது கணவர் நிஷால் சந்திராவை பிரிந்த பிறகு துபாயில் நடந்த மேடை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் திலீப்பும் பங்கேற்றார்.

பாவனா
துபாயில் திலீப்பும், காவ்யா மாதவனும் ஓவராக ஒட்டி உறவாடியுள்ளனர். இதை நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகை பாவனா பார்த்து உடனே தனது தோழியான மஞ்சுவுக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.

மஞ்சு
திலீப், காவ்யா தொடர்பு பற்றி அறிந்த மஞ்சு அதிர்ச்சி அடைந்துள்ளார். காவ்யாவை விட்டுவிடுமாறு மஞ்சு திலீப்பை கெஞ்சினார் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











