Don't Miss!
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- News சம்மருக்கு டிராவல் பண்றவங்களுக்கு நோ பிராப்ளம்.. சூப்பர் பிளானை கையில் எடுத்த ரயில்வே! இத பாருங்க
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
20 நாள் ஆயிடுச்சு.. இன்னும் உன் நினைவோடுதான் எழுகிறேன்.. சுஷாந்துக்காக உருகும் பிரபல நடிகை!
சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்து 20 நாட்கள் கடந்த நிலையில் பிரபல நடிகையான பூமிகா அவர் குறித்து உருக்கமாக பகிர்ந்திருக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள மும்பை போலீசார், சுஷாந்துக்கு நெருக்கமானவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாருமேல சூப்பர்ஸ்டார்.. நரம்புக்குள்ள சூப்பர்ஸ்டார்.. சிம்பு குரலில் தெறிக்குது ரஜினிகாந்த் ஆந்தம்!
போலீசார் திட்டம்
அந்த வகையில் சுஷாந்தின் குடும்பத்தினர், நண்பர்கள், அவரது மருத்துவர் மற்றும் சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி உள்ளிட்ட 23 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். இயக்குநர் சஞ்சய் பன்சாலி உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
நடிகை பூமிகா உருக்கம்
இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார் சுஷாந்தி சிங் ராஜ்புத். இதன்மூலம் தோனியின் ரசிகர்களையும் தனது ரசிகர்களாக்கி கொண்டார். இந்நிலையில் தோனி படத்தில் சுஷாந்துக்கு அக்காவாக நடித்த நடிகை பூமிகா, அவர் குறித்து உருக்கமாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
20 நாட்களாகிவிட்டது
இதுதொடர்பாக பூமிகா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருப்பதாவது, ''கிட்டத்தட்ட 20 நாட்களாகிவிட்டது.. இன்னும் நான் உன் நினைவோடுதான் எழுந்திருக்கிறேன். அது என்னவென்று இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன்.. ஒருவர் ஸ்க்ரீனில் ஒரு கதாபாத்திரமாக சுருக்கமாக மட்டுமே பகிர்ந்து கொண்டார், ஆனால் இன்னும் ஒன்றாக இணைந்திருக்கிறார்.
View this post on InstagramA post shared by Bhumika Chawla (@bhumika_chawla_t) on
பர்சனலாக கூட இருக்கட்டும்
இது மனச்சோர்வு.. பர்சனலாக கூட இருக்கட்டும்.. நீங்கள் பேசியிருக்க வேண்டும்.. அது தொழில் சார்ந்தது என்றால் நீங்கள் ஏற்கனவே நல்ல படங்களை கொடுத்திருக்கிறீர்கள். ஆம் நான் ஒப்புக்கொள்கிறேன் இங்கே உயிர்வாழ்வது எளிதல்ல.. நான் உள்ளிருப்பவர்கள் மற்றும் வெளியில் இருந்து வருபவர்களை பற்றி பேசவில்லை.
எளிதானது இல்ல
இது என்ன.. 50 பிளஸ் படங்களை கொடுத்த பிறகும் நான் ஒருவருடன் தொடர்பில் இருக்க வேண்டும் என்றால் அது எளிதானது அல்ல. ஆனால் நான் இன்னும் நன்றியுடன் இருக்கிறேன், நான் வேலை செய்கிறேன். ஒருவேளை நான் இந்த கண்ணோட்டத்தில் வேலை பார்க்கவும் நல்லதை சிந்திக்கவும் நம்பவும் என்னை தள்ளுகிறேன்.
அன்பானவர்கள்..
ஆம், நீங்கள் தொழில்துறையிலிருந்து (பாலிவுட் அல்லது பிற இடங்களை) அழைக்கும் அல்லது செய்தி அனுப்பும் நேரங்கள் உள்ளன, பெரும்பாலான மக்கள் உண்மையிலேயே சூடானவர்களாகவும் அன்பாகவும் இருக்கிறார்கள், ஆனால் உங்களை ஏற்க மறுப்பவர்களையும் ஒதுக்கி தள்ளுபவர்களையும் தான் நாம் காண்கிறோம்.
சிரித்துவிட்டு போவார்கள்
உலகம் எல்லா வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களை எப்போதும் மதிக்கும் பெரும்பாலானவர்கள் இருக்கிறார்கள், ஆனால் உங்களின் தேவை உள்ள அரிதான சிலர் உங்களிடம் வருவார்கள். ஆனால் நீங்கள் அவர்களுடன் வேலை செய்ய விரும்பும் போது, பார்ப்போம் என்பார்கள் அல்லது சிரித்து விட்டு போய்விடுவார்கள்.
முடிவை எடுத்துவிட்டேன்
(முன்பு இதனை நான் ஒருபோதும் நம்பவில்லை என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் நான் ஒரு முயற்சி செய்தேன் - அதுதான் வாழ்க்கை - முயற்சி மற்றும் கடின உழைப்பு இல்லாமல் எதுவும் வரவில்லை) எல்லாவற்றிற்கும் கடவுளுக்கு நன்றி சொல்லுகிறேன்.. எல்லாவற்றுக்கும் சரிதான் என்ற முடிவை எடுத்து விட்டேன்.
உங்களுக்காக பிரார்த்தனை..
இன்னும் ஏதாவது இருந்தால் அது என்னவென்று எங்களுக்குத் தெரிய வரும் என்று நம்புகிறேன். அதுவரை இறுதி குட்பை.. உங்களுக்காக பிரார்த்தனை.. நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் குடும்பத்திற்காகவும் பிரார்த்தனை..'' இவ்வாறு உருக்கமாக பதிவிட்டுள்ளார் நடிகை பூமிகா.