Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திருச்சிற்றம்பலம் பெஸ்டி கேரக்டர் நாயகி கோலிவுட்டில் ரீ என்ட்ரி: இந்த முறை ஏஞ்சல் இல்லையாம்
சென்னை: முன்னணி நடிகையாக வலம் வந்த பூமிகா, நீண்ட நாட்களாக தமிழில் நடிக்காமல் இருந்து வருகிறார்.
Recommended Video
விஜய்யுடன் பத்ரி படத்தில் பெஸ்டியாக நடித்து தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர் பூமிகா.
இந்நிலையில், பூமிகா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெஸ்டிகளின் முன்னோடி
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்துள்ளது. குறிப்பாக இந்தப் படத்தில் தனுஷின் பெஸ்டியாக நடித்துள்ள நித்யா மேனனின் ஷோபனா கேரக்டரை, ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் ஷோபானா மாதிரியான கேரக்டர்கள் இதற்கு முன்பும் சில படங்களில் இடம்பெற்றுள்ளன. ஆனாலும், ரசிகர்களால் மறக்க முடியாத பெஸ்டியாக இன்றும் கொண்டாடப்படுவது பத்ரி படத்தில் ஜானுவாக நடித்திருந்த பூமிகா தான்.
ரோஜாக்கூட்டம் மனோ
விஜய்யின் பெஸ்டி ஜானு என்ற பூமிகாவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பூமிகாவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. சாந்தமான முகம், அமைதியான பேச்சு, ஆர்ப்பாட்டமில்லாத இயல்பான நடிப்பால் ஈர்க்க வைத்தார். அதனமூலம் ஸ்ரீகாந்த் ஹீரோவாக அறிமுகமான 'ரோஜாக்கூட்டம்' படத்தில் மனோ என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் பூமிகாவின் கேரக்டர் கிட்டத்தட்ட பெஸ்டியாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது. இதனால், பூமிகா ரசிகர்களுக்கும் பெஸ்டியாகிப் போனார்.
முன்பே வா பூமிகா
பத்ரி, ரோஜாக்கூட்டம் படங்களைத் தொடர்ந்து பூமிகாவிற்கு தமிழில் நடிக்க நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. ஆனாலும், அவர் இந்தி, தெலுங்கு படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தினார். இந்நிலையில், சூர்யாவுடன் பூமிகா நடித்த 'சில்லுன்னு ஒரு காதல்' படம், அவரை இன்னும் கொண்டாட வைத்தது. 'முன்பே வா என் அன்பே வா' என்ற அந்த ஒரு பாடலில், செம்மையாக ஸ்கோர் செய்து அசத்தினார்.
மீண்டும் தமிழில் என்ட்ரி
அதன்பின்னர் தமிழில் பூமிகா நடித்த 'களவாடியப் பொழுதுகள்' தாமதமாக வெளியானது. அதனால் அவர் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருந்தது பலருக்கும் அறியமுடியாமல் போனது. திருமணத்திற்குப் பின்னர் தமிழ் சினிமாவில் அதிகம் தலைகாட்டாமல் இருந்த பூமிகா, வழக்கம் போல இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். கிரிக்கெட் வீரர் தோனியின் பயோபிக் படமாக உருவாகிய 'தோனி அண்டோல்ட் ஸ்டோரி' படத்தில், தோனியின் அக்காவாக நடித்து கவனம் ஈர்த்தார். இந்நிலையில், அவர் மீண்டும் தமிழில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜெயம் ரவியுடன் நடிக்கும் பூமிகா?
தமிழில் இதுவரை ஹீரோயினாக ரவுண்டு வந்த பூமிகா, இந்த முறை அக்கா கேரக்டரில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஜெயம் ரவியின் 30வது படத்தில் அவருக்கு சகோதரியாக நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் பெஸ்டியான பூமிகா, மீண்டும் கோலிவுட்டில் என்ட்ரி கொடுப்பது, அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.