Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்னைப்பத்தி என்ன நினைச்சுட்டிருக்கீங்க.. அவரைப் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்களிடம் சீறிய நடிகை!
சென்னை: நடிகர் ஒருவர் குறித்த கேள்விக்கு நடிகை கேத்ரீன் தெரசா கோபப்பட்ட சம்பவம் திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை கேத்ரின் தெரேசா ஷங்கர் ஐபிஎஸ் என்ற கன்னட படத்தின் மூலம் நடிப்புக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து மலையாள படங்களில் வாய்ப்புக் கிடைத்ததால் தொடர்ந்து 2 படங்களில் நடித்தார்.
இதனை தொடர்ந்து அவருக்கு தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக மெட்ராஸ் படத்தில் நடித்தார்.
ஓவரா பில்டப் கொடுத்தாங்களே... அர்ஜுன்ரெட்டி மேஜிக் ஒர்க் அவுட் ஆகலை.. சுருண்டு விழுந்த பேமஸ் லவ்வர்
அடுத்தடுத்து வாய்ப்பு
இதில் வட சென்னை பெண்ணாக அவரது அபார நடிப்பு பாராட்டை பெற்றது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன. கதக்களி, கணிதன், கடம்பன், கதாநாயகன், கலகலப்பு 2, வந்தா ராஜாவாதான் வருவேன், நீயா 2, அருவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
பாலகிருஷ்ணாவுக்கு ஜோடி
விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த வேர்ல்டு ஃபேமஸ் லவ்வர் என்ற திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது. தொடர்ந்து தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிஸியாக உள்ளார் கேத்ரீன் தெரேசா. இவர் தெலுங்கு சினிமாவின் மூத்த நடிகரான என்.டி. பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரின் நடிப்பதாக தகவல் வெளியானது.
நடிக்க மறுப்பு - தகவல்
பல முன்னணி நடிகைகள் மறுத்தப் போதும் கேத்ரீன் தெரேசா பாலகிருஷ்ணாவுடன் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்பட்டது. இதற்காக அவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அப்படத்தில் கேத்ரின் தெரேசா நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இதுகுறித்து கேத்ரீன் தெரேசா தரப்பில் இருந்தோ அல்லது தயாரிப்பாளர் தரப்பில் இருந்தோ எந்த தகவலும் இல்லை.
செம கோபம்
இந்நிலையில் கேத்ரின் தெரசா தனது புதிய பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அவரிடமே அதற்கான பதிலை பெற விரும்பிய நிருபர்கள் என்.டி.பாலகிருஷ்ணா படத்தில் நடிக்கிறீர்களா என்றனர். இதனைக் கேட்டு கடும் கோபமடைந்த கேத்ரீன் தெரேசா என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் என கேட்டு சீறினார்.
Recommended Video
திரைத்துறையில் பரபரப்பு
நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல நான் ஆள் இல்லை.
அதுபற்றி சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் அல்லது தயாரிப்பாளர் ரவீந்தர் ரெட்டி அல்லது இயக்குனரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். இதுதொடர்பாக எந்த பதிலும் நான் சொல்ல மாட்டேன் என ஏற்கெனவே தெளிவாக கூறியிருக்கிறேன் என்று கூறிவிட்டு வேகமாக புறப்பட்டுவிட்டார். நடிகை கேத்ரீன் தெரசா திடீரென இப்படி கோபப்பட்ட சம்பவம் திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.