Don't Miss!
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- News திடீரென கழன்று விழுந்த சக்கரம்! ஜஸ்டு மிஸ்ஸில் தப்பிய பயணிகள் விமானம்! மரண விளிம்புக்கே சென்ற மக்கள்
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அநீதிக்கு எதிராக சீறிய சாந்தினி ரசிகர்கள் பாராட்டு
Recommended Video
சென்னை: நேற்று வெளியான சீறு படத்திற்கு நல்ல வரவேற்பும் மற்றும் நல்ல விமர்சனமும் கிடைத்துள்ளது.
இப்படத்தில் நடித்த சாந்தினிக்கு பல பாராட்டுக்கள் வந்து குவிகின்றன.
கோலி சோடா படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சாந்தினி.
கோலி சோடா படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சாந்தினி. இது அவருக்கு முதல் படம், அதிலே நன்றாக நடித்து பல முன்னணி இயக்குனர்களின் வாழ்த்தை பெற்ற இவர் இரண்டாவதாக நடித்த திரைப்படம் தான் சீறு.
படத்தில் பலரும் நடிக்க தயங்கும் கதாபாத்திரத்தை சாந்தினி ஏற்று நடித்து இருந்தார். படத்தை பாதி இவர் தான் தாங்கி உள்ளார். பள்ளி மாணவியாக வந்த அனைவரும் இவரை ரசிக்கும் படி செய்துள்ளார். பெண்களின் பாதுகாப்பு எவ்வளவு முக்கியமானது, இந்த நாட்டில் அவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும் என்று உணர்த்தி உள்ள படம் சீறு.
தனது முந்தைய படத்தில் அக்கா மீது வைத்துள்ள பாசத்தை பற்றி பேசிய இயக்குனர் ரத்ன சிவா, இப்படத்தில் தங்கை பாசத்தை பற்றி பேசியுள்ளார். அந்த பாசத்தை காட்டும் காட்சிகள் அனைத்தும் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது என்று பலரும் கூறியுள்ளனர்.
பாப்பா பாப்பா என்று தன் தங்கையை ஜீவா பேசும் காட்சிகள், அனைத்தும் அண்ணன் தங்கை பாசம் என்றால் இவர்களது பாசம் தான் என்று நம்மை நினைக்க வைக்கின்றன. இவர்கள் போல தான் அண்ணன் தங்கை இருக்க வேண்டும் என்று எடுத்துக் காட்டாகவும், இருவரும் படத்தில் நடித்து இருக்கின்றனர்.
பிளஸ் 2வில் மாநிலத்தில் முதல் இடம் பெற்று தொலைக்காட்சியில், பேட்டி கொடுக்கும் போது பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை பற்றி கூறி ஆடியன்ஸ் இடம் இருந்து பல கைதட்டல்களை பெற்று அவர்களை ரசிக்க வைத்துள்ளார் சாந்தினி.
வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கணேஷ் அவர்கள் இந்த படம் பற்றி பேசும் போது மிகவும் பெருமையான தருணம் என்று பல மேடைகளில் சொல்லி வருகிறார்.
மூன்று நூற்றாண்டுகளின் கதை '2323' .. மூன்று பாகமாக வெளியிட முடிவு!
இது போன்ற ஒரு கதையை தேர்வு செய்து அதில் கதாபாத்திரத்திற்கு ஏற்ற நடிகர்களை நடிக்க வைத்து, படம் பார்க்க வரும் நம்மை யோசிக்க வைத்து, பெண்களுக்கு இது போன்று நடக்கிறது என்று ஒரு நல்ல கருத்துடன் படத்தை இயக்கி உள்ளார் ரத்ன சிவா. அவருக்கு பல தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!