Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
2 மாதங்களுக்கு முன்பே சித்ராவுடன் திருமணம் முடிந்துவிட்டது.. போலீஸில் ஹேம்நாத் கூறிய திடுக் தகவல்!
சென்னை: நடிகை சித்ராவின் தற்கொலை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஹேம்நாத் போலீஸில் அளித்துள்ள திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
Recommended Video
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த நடிகை சித்ரா, சென்னை நசரத் பேட்டை அருகே உள்ளே ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்படி என்ன அவசரம் முல்லை.. விஜே சித்துவின் திடீர் தற்கொலையால் கதறி அழும் ரசிகர்கள் #RIpmullai
அவர் தனது வருங்கால கணவரான ஹேம்நாத்துடன் தங்கியிருந்த போது இந்த அதிர்ச்சி முடிவை எடுத்துள்ளார். அவரது மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
ஏதோ மர்மம்
குறிப்பாக சித்ராவின் கன்னத்திலும் உடம்பிலும் இருந்த காயங்கள் அவரது மரணத்தில் ஏதோ மர்மம் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் 2.30 மணிக்கு ஹோட்டல் அறைக்கு தனது வருங்கால கணவரான ஹேம்நாத்துடன் வந்துள்ளார் சித்ரா.
தூக்கில் தொங்கிய சித்ரா
பின்னர் 3 மணியளவில் குளிக்கப்போவதாக கூறி ஹேம்நாத்தை வெளியே போக சொன்னதாகவும் நீண்ட நேரம் ஆகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் நிர்வாகத்திடம் மாற்றுச்சாவி வாங்கி அறைக்கதவை திறந்துள்ளார் ஹேம்நாத். அப்போத ஃபேனில் தூக்கில் தொங்கியப்படி சடலமாக கிடந்துள்ளார் சித்ரா.
பிரேத பரிசோதனை
இதனால் அதிர்ச்சியடைந்த ஹேம்நாத் மற்றும் ஹோட்டல் நிர்வாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஹேம்நாத்திடம் விசாரணை
மேலும் சித்ராவின் கன்னத்தில் இருந்த காயம் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு அவருடன் அறையில் தங்கியிருந்த வருங்கால கணவரான ஹேம்நாத்திடம் போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே திருமணம்
போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலதிபர் ஹேம்நாத்
பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். அதாவது, தனக்கும் சித்ராவுக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பதிவு திருமணம் முடிந்து விட்டதாக கூறியுள்ளார்.
அக்.19ல் திருமணம்
இருவருக்கும் அக்டோபர் 19ஆம் தேதி பதிவு திருமணம் நடந்து முடிந்து விட்டதாக போலீஸ் விசாரணையில் கூறியுள்ளார் ஹேம்நாத். நிச்சயதார்த்தம் மட்டுமே நடந்துள்ளது, அடுத்த மாதம் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மன உளைச்சல்
மேலும் ஷூட்டிங் முடித்து ஹோட்டலுக்கு வந்தது முதலே சித்ரா மன உளைச்சலுடன் காணப்பட்டதாகவும் கூறியுள்ளார் ஹேம்நாத். இதனை தொடர்ந்து பதிவு திருமணம் செய்த சான்றிதழை சமர்ப்பிக்குமாறு ஹேம்நாத்திடம் போலீசார் அறிவுறுத்தினர்.
ஆர்டிஓ விசாரணை
இந்நிலையில் இருவருக்கும் திருமணம் நடந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில் சித்ராவின் மரணம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். போலீஸ் விசாரணையில் சித்ராவின் மரணத்தில் உள்ள மர்ம முடிச்சுகள் அவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது.