Don't Miss!
- News பம்பரம் இல்லை! துரை வைகோ போட்டியிடுவது தீப்பெட்டியா? கேஸ் சிலிண்டர் சின்னமா?
- Finance மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் பங்கேற்கும் சவுதி அரேபியா.. வரலாற்று சம்பவம் பாஸ்..!!
- Sports SRH vs MI : அந்த ஜாம்பவானிடம் பேசினேன்.. என் நம்பிக்கைக்கு அதுவே காரணம்.. அபிஷேக் சர்மா பேட்டி!
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Automobiles மோடியின் பாதுகாப்புக்கு செல்லும் இந்த டீசல் காரை இனி பயன்படுத்த கூடாது! வெளியான புதிய உத்தரவு
- Lifestyle உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
நடிகை தீபா தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்..சிசிடிவி காட்சி லீக்..காதலனிடம் விசாரணை!
சென்னை : நடிகை தீபா, தற்கொலை செய்து கொண்ட வழக்கில் புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளதால், போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
துணை நடிகையான தீபா, விருகம்பாக்கம் மல்லிகை அவென்யூ பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவருக்கு வயது 29.
இவர் சனிக்கிழமை வீட்டின் மின் விசிறியில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனசுல நிறைய கவலை இருக்கு..அதை கேட்கத்தான் யாருமே இல்லை..இன்ஸ்டாவில் புலம்பிய நடிகை தீபா !
நடிகை தீபா
இயக்குநர் மகிவர்மன் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான வாய்தா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தீபா என்கிற ஜெஸிகா பவுலின். இவர் விஷாலின் துப்பறிவாளன் படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 29 வயதான தீபா, தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோயம்பேடு போலீசார்,உடலை கைப்பற்றி கீழ்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
காதலனிடம் விசாரணை
இதையடுத்து, போலீசார் வீட்டில் மேற்கொண்ட சோதனையில், தீபா தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்திருந்த கடிதம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த கடிதத்தில், உயிருக்கு உயிராக தாம் ஒருவரை காதலித்ததாகவும், அந்த காதல் நிறைவேறாததால் உலகத்தைவிட்டு செல்வதாகவும், தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதி வைத்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், காதலன் சிராஜுதினிடம் தீவிரமாக விசாணை நடத்தி வருகின்றனர்.
செல்போனில் வாக்குவாதம்
தீபாவின் செல்போனை ஆய்வு செய்த போலீசார் தற்கொலைக்கு முன் சிராஜுதினிடம் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் அவர் காதலரிடம் பேசியது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், நடிகை தீபாவின் குடியிருப்பு அருகே உள்ள சிசிடிவியை கைப்பற்றி ஆய்வு செய்த போலீஸார், அவரது வீட்டிற்கு யார், யாரெல்லாம் வந்து சென்றுள்ளனர் என்ற தகவல்களையும் சேகரித்து வருகின்றனர்.
நண்பனிடம் தீவிர விசாரைணை
அத்துடன் அவர் தற்கொலை செய்து கொண்ட தகவலை காதலன் சிராஜுதீன் மூலமாக தெரிந்து கொண்ட அவரது நண்பர் பிரபாகரன் நடிகை தீபாவின் வீட்டிற்கு பதற்றத்தோடு ஓடிவரும் சிசிடிவி காட்சியும் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சிராஜுதீன் அவரது நண்பர் பிரபாகரன் ஆகியோர் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
காதலன் திருமணமானவர்
நடிகை தீபாவின் காதலன் சிராஜுதீனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரு குழந்தை இருக்கும் நிலையில், அவர் தீபாவுடன் பழகி உள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாகவும் மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. பிரேதப் பரிசோதனை முடிந்து நடிகை தீபாவின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஆந்திராவுக்கு கொண்டு செல்லப்பட்டது.
-
2வது திருமணம் செய்துக் கொண்ட அதிதி ராவ்.. சித்தார்த்துடன் தெலங்கானா கோயிலில் ரகசிய கல்யாணம்?
-
கணவனுக்கும் மனைவிக்கும் இதுல கூட போட்டியா?.. ராம்சரண் - உபாசனா சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா?
-
சேஷு உயிரிழக்க காரணமே இதுதான்.. அவர்கிட்ட இருந்து இதை மட்டும் கத்துக்காதீங்க.. நடிகர் பழனி பகீர்!