Don't Miss!
- News வெறிச்சோடிய சென்னை சாலைகள்.. எல்லா பக்கமும் காலி ரோடு.. இதுதான் காரணமா? ஓட்டுப்பதிவு நாளில் இப்படியா
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Technology யாருமே எதிர்பார்க்கல.. 8ஜிபி ரேம்.. 50எம்பி கேமரா.. புதிய Samsung 5ஜி மாடல் அறிமுகம்.. என்ன விலை?
- Finance விப்ரோ ஊழியர்கள் நிலைமை ரொம்ப மோசம்.. என்னவெல்லாம் நடக்குது பாருங்க..!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
சென்னை எனக்கு சொந்த வீடு மாதிரி.. ரசம் சாதம் ரொம்ப பிடிக்கும்.. சொல்றது யாருன்னு பாருங்க மக்களே!
சென்னை: சென்னை தனக்கு சொந்தவீடு மாதிரி என நடிகை தீபிகா படுகோன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி சென்னையில் தனக்கு பிடித்த விஷயங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
நடிகை தீபிகா படுகோன் 2007ஆம் ஆண்டு ஓம் ஷாந்தி ஓம் படத்தில் நடித்ததன் மூலம் நாடு முழுவதும் அறிமுகமானார். தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் கோச்சடையான் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
தீபிகா படுகோன் நடிப்பில் உருவான பத்மாவதி படம் பெரும் சர்ச்சைக்கு பின் வெளியாகி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன் கடந்த ஆண்டு நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தல போல வருமா.. வைரலாகும் அஜித்தின் புதிய போட்டோ.. ஆனா, ரசிகாஸ் நாம தப்புக் கணக்கு போட்டுட்டோமோ?
இந்நிலையில் தீபிகா படுகோன் தற்போது சென்னை வந்துள்ளார். சென்னை அண்ணாநகரில் உள்ள வாட்ச் கடை ஒன்றில் புதிய மாடல் வாட்சை அறிமுகப்படுத்திய அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது சென்னை மக்களை தனக்கு மிகவும் பிடிக்கும் என்ற அவர், கடந்த ஆண்டு சென்னைக்கு வந்த தான் தற்போது மீண்டும் வந்திருப்பதாகவும் இது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
சென்னை தனக்கு சொந்தவீடு போன்றது என்றும் அவர் கூறினார். மேலும் தென்னிந்திய உணவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது ரசம் சாதம்தான் என்றும் தீபிகா படுகோன் கூறினார். ஒரே ஒருநாள் தலைமறைவாக இருந்து வாழ்வது என்றால் சென்னை மக்களுடன்தான் வாழ்வேன் என்றும் நடிகை தீபிகா படுகோன் தெரிவித்தார்.