Don't Miss!
- News தமிழ்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு சம்பளம் எவ்வளவு.. இவ்வளவு சலுகைகளா? ஆச்சர்யமான தகவல்கள்
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சுடுகாட்டில் குழி தோண்டி ஈமச்சடங்கு செய்த நடிகை!
சென்னை: ஆறடி படத்தில் நடித்துள்ள நடிகை தீபிகா சுடுகாட்டில் குழி தோண்டி ஈமச்சடங்கு செய்துள்ளார்.
இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கியுள்ள படம் ஆறடி. இந்த படத்தை ஸ்ரீசிவ குடும்பம் பிலிம்ஸ் சார்பில் எஸ்.நவீன்குமார், எஸ்.சுமதி, எஸ்.மோகனவேல் இணைந்து தயாரித்துள்ளனர்.
இதில் விஜய்ராஜ் நாயகனாக நடித்துள்ளார், நாயகியாக தீபிகா நடித்துள்ளார். பெண் ஒருவர் வெட்டியாள் வேலை செய்யும் கதையை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளது.
வெட்டியாள் வேடம்
இன்று படம் ரிலீஸானதை தொடர்ந்து படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது. அப்போது பேசிய படத்தின் நாயகி தீபிகா , இந்தப் படத்தில் நடிக்க தன்னை அணுகிய இயக்குனர் சந்தோஷ்குமார், பிணம் எரிக்கும், புதைக்கும் வெட்டியாள் வேடம் என்றார்.
வித்தியாசமாக இருந்ததால்
சேலத்தில் ஒரு பெண் இந்த வேலை செய்வதாகவும் அவரது வாழ்க்கை தழுவிய கதை என்றும் கூறினார். வித்தியாசமாக இருந்ததால் நடிக்க முடிவு செய்தேன்.
பேச்சை மீறி நடித்தேன்
ஆனால் இந்த கதாப்பாத்திரத்தில் நடிக்க தனது பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை என்றும் பெற்றோரின் பேச்சை மீறிதான் நடித்துள்ளேன் என்றும் கூறினார்.
தகனம் செய்யும் காட்சி
சுடுகாடு, சவம் என்றாலே கொஞ்சம் பயம்தான். ஆனால் அந்த பயத்தை தூரவைத்துவிட்டு சவ குழி தோண்டும் காட்சிகளிலும், தகனம் செய்யும் காட்சியிலும் படம் முழுக்க நடித்தேன்.
சகோதர பாசம்
என்னதான் சுடுகாட்டு பின்னணி கதை என்றாலும் அதில் ஒரு காதலும், சகோதர, சகோதரி பாசமும் இருக்கும் என்றும் நடிகை தீபிகா தெரிவித்துள்ளார்.