Don't Miss!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- News தமிழ்நாடு முழுக்க பணம் வசூல் செய்துள்ளார்.. பாஜக தலைவர் அண்ணாமலை மீது சிங்கை ராமச்சந்திரன் பகீர்
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
அது எப்படி நிர்வாணமாக நடிக்கலாம் என மிரட்டுகிறார்கள்: சென்னை போலீசில் நடிகை புகார்
Recommended Video
சென்னை: தனக்கு போன் பண்ணி மிரட்டல் விடுக்கப்பட்டதாக நடிகை தன்யா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
போர்க்களத்தில் ஒரு பூ, 18.5.2009 ஆகிய படங்களில் நடித்துள்ளவர் தன்யா. போர்க்களத்தில் ஒரு பூ படத்தில் இலங்கையில் நடந்த போரில் உடல் சிதைத்து கொலை செய்யப்பட்ட இசைப்பிரியாவாக நடித்திருந்தார்.
தற்போது வெளியாகியுள்ள 18.5.2009 படத்தில் விடுதலை புலிகள் இயக்க போராளியாக நடித்துள்ளார்.
18.5.2009
18.5.2009 படம் இலங்கை போரின்போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் தமிழ்ச்செல்வியாக நடித்துள்ளார் தன்யா.
கொலை
படத்தில் தமிழ்ச்செல்வி இலங்கை ராணுவத்தால் நிர்வாணப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்படுகிறார். அவரது கணவர் தற்கொலைப்படை தாக்குதலில் இறக்க, குழந்தை பசியால் இறக்கிறது.
மிரட்டல்
தன்யா வடபழனியில் வாடகை வீட்டில் வசிக்கிறார். கடந்த 14ம் தேதி இரவு 1.15 மணிக்கு யாரோ போன் செய்து அவரை அசிங்கமாக திட்டியுள்ளனர். அது எப்படி நீ நிர்வாணமாக நடிக்கலாம் என்று கேட்டு திட்டியுள்ளனர்.
புகார்
மீண்டும் கடந்த 16ம் தேதி காலை 5 மணிக்கு போன் செய்து மிரட்டியுள்ளனர். இதையடுத்து தன்யா இது குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.