Don't Miss!
- News "ஸ்வெட்டர் வாங்கி வைத்திருக்கிறேன்".. திமுக வேட்பாளர் தமிழச்சிக்கு வாழ்த்து தெரிவித்த சீனு ராமசாமி!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சமூக சேவகியாக மாறிய தர்ஷா குப்தா… குவியும் பாராட்டு!
சென்னை : விஜய் டிவி குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா உணவின்றி வாடும் ஏழை மக்களுக்கு உணவு வழங்கி வருகிறார்.
சில தன்னார்வத் தொண்டு அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொரு பகுதியாக சென்று உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.
இந்த நெருக்கடியான நேரத்துல உள்ளாற இருக்கற அமைதிய வெளில கொண்டு வரணும்... சரத்குமார் ட்வீட்
அதே போல இவர் ராயபுரத்தில் வருமானமின்றி தவித்த மீனவ குடும்பத்திற்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார்.
அடக்க ஒடுக்கமாக
ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த தொடரில் மிகவும் குடும்பப்பாங்கான பெண்ணாக அடுக்க ஒடுக்கமாக நடித்திருந்தார் தர்ஷா குப்தா.
பிரபலமானார்
விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2-வது சீசன் சீசனில், இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், இவர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி கலக்கி வருகிறார்.
கிளாமர்
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், பட வாய்ப்புக்காக கவர்ச்சியை தூக்கலாக காட்ட ஆரம்பித்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் சீரியல்களில் நடித்து பிரபலமானதை விடவும் இன்ஸ்டாகிராமில் பலவித வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.
சமூகசேவகி
தற்போது தர்ஷா குப்தா ஒரு சமூகசேவகியாக மாறி உள்ளார். கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு இவர் உதவிகளை செய்து வருகிறார். சில தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து ஒவ்வொவரு பகுதிக்கும் தானாக சென்று உணவு இன்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கி வருகிறார். இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகின்றனர். அதேபோல, இவர் ராயபுரத்தில் வருமானமின்றி தவித்த மீனவ குடும்பத்திற்கு அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவி செய்துள்ளார்.