பார்த்தவுடன் பக்குனு பற்றிக்கொள்ளும் அழகில் தர்ஷா குப்தா… வர்ணித்து கொஞ்சும் ரசிகர்கள் !
சென்னை : விஜய் டிவி குக்வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை தர்ஷா குப்தா, பார்த்தவுடன் பக்குனு பற்றிக்கொள்ளும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், நேரம் கிடைக்கும் போது எல்லாம் போஸ்ட் போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.
இவரை பின்தொடரும் ரசிகர்களை ஏமாற்றாமல் விதவித போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

வசீகரமான கண்
பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் அழகு, வசீகரமான கண், வளைந்து நெளிந்த இடை என கொள்ளை அழகை மொத்தமாக குத்தகைக்கு எடுத்தவர் தர்ஷா குப்தா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானார். ஆனால், அதற்கு முன்பாக ஒரு தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.

அடக்க ஒடுக்கமாக
ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் தர்ஷா குப்தா கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்த தொடரில் இவரை பார்க்கும் போது, இயல்பான பக்கத்துவீட்டு பெண் போல, அத்தனை அடக்க ஒடுக்கமாக நடித்திருந்தார் .

பிரபலமானார்
இதையடுத்து கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்து இணையத்தில் திணற திணற ரணகளப்படுத்தி இளசுகளை குதுகலப்படுத்தினார். இதனால் இவரைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.5 மில்லியனை தொட்டது. இதையடுத்து குக் வித் கோமாளி சீசன் 2வில் பங்கேற்று விரைவில் எலிமினேட் ஆனார்.

திரைப்பட வாய்ப்பு
தர்ஷா குப்தா தற்போது விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே தொடரில் ஐஸ்வர்யா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி கலக்கி வருகிறார். மேலும், இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் நடித்து வருகிறார் தர்ஷா குப்தா.

பாவாடை சட்டையில்
சேலையிலும், மார்டன் உடையிலும் வந்த தர்ஷா, தற்போது பாவாடை சட்டையில் அப்படியே பருவ மொட்டாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்த, ரசிகர்கள் ஆத்தாடி என்னமா இருக்கீங்க, இந்த அழகை எல்லாம் இத்தனை நாள் எங்க ஒளிச்சு வச்சிருந்தீங்க என்று செல்லமாக அவரை கொஞ்சி வருகின்றனர். இணையத்தில் வெளியான இந்த புகைப்படம் வைரலாகி பல லைக்குகளையு ம் கமெண்ட்டுகளையும் பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











