Don't Miss!
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- News இன்று நாடு முழுக்க 60% வாக்குப்பதிவு.. நாகாலாந்தில் 6 மாவட்டத்தில் ஜீரோ வாக்குகள் பதிவு! என்ன காரணம்
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
ஆஹா வம்பை விலை கொடுத்து வாங்குகிறாரே திவ்யா!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தீவிரவாத அமைப்போடு ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பியுள்ளார் திவ்யா ஸ்பந்தனா.
டெல்லி: நடிகை திவ்யா ஸ்பந்தனா ஆர்.எஸ்.எஸ். அமைப்பை தீவிரவாத அமைப்போடு ஒப்பிட்டுள்ளார்.
குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா. அப்படத்திற்க்கு பிறகு குத்து ரம்யா என பரவலாக அழைக்கப்பட்டதால் அவரது ஒரிஜினல் பெயரான திவ்யா ஸ்பந்தனா என்பதே பலருக்கு மறந்து போய் விட்டது. தமிழ் சினிமாவை விட்டு ஓய்ந்த பிறகு திவ்யாவுக்கு மாறிக் கொண்டார்.
தமிழில் பொல்லாதவன், கிரி, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்த அவர், பிறகு சினிமாவை விட்டு விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து அரசியல் வாழ்வைத் துவங்கினார். இப்போது காங்கிரஸ் கட்சியின், தேசிய சமூக வலைதளம் மற்றும் தகவல் தொடர்புத் துறை தலைவராக உள்ளார்.
இந்த நிலையில் இவர் போட்டுள்ள ஒரு இன்போகிராப் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை எகிப்தின் முஸ்லிம் பிரதர்ஹுட் அமைப்புடன் ஒப்பிட்டு பதிவிட்டுள்ளார். முஸ்லீம் பிரதர்ஹுட் தீவிரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டதாகும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லண்டனில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆப் ஸ்ட்ராடஜிக் ஸ்டடீஸ் மையத்தில் உரையாற்றிய போது இந்தியாவில் உள்ள ஜனநாயக அமைப்புகளை எல்லாம் ஆர்.எஸ்.எஸ் கைப்பற்ற நினைக்கிறது, எகிப்தின் முஸ்லிம் பிரதர்ஹுட் அமைப்புக்கும் ஆர்.எஸ்.எஸுக்கும் ஒற்றுமை உள்ளது எனப் பேசியிருந்தார். இதற்கு வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக கூறியது.
ராகுலுக்கு ஆதரவளிக்கும் வகையில், திவ்யா ஸ்பந்தனா இரு அமைப்புகளுக்கும் இருக்கும் ஒற்றுமையை பட்டியலிட்டுள்ளார்.
— Divya Spandana/Ramya (@divyaspandana) August 29, 2018
இரண்டு இயக்கங்களும் தொடங்கப்பட்ட ஆண்டு, நோக்கம், செயல்பாடு என பட்டியலிட்டுள்ளார். இதை வைத்து என்னவெல்லாம் பஞ்சாயத்துக் கிளம்பப் போகுதோ!