Don't Miss!
- News கேம் சேஞ்சர் ஆக போகும் நாம் தமிழர்.. இந்த தொகுதிகளில் மொத்தமாக முடிவே மாற போகுது.. அப்போ அதிமுக?
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Technology ரூ.17,000 பட்ஜெட்ல பரபரப்பு! 70W சார்ஜிங், 6000mAh பேட்டரி, 24GB ரேம், 1TB மெமரி, 5G ஆதரவு.. ஏப்.4 முதல் SALE!
- Sports ரூ.8.4 கோடியை மறந்துவிடு.. உன்னோட வேலை அதுமட்டும் தான்.. தோனியின் வார்த்தை குறித்து சிஎஸ்கே சிங்கம்!
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பா ரஞ்சித் படத்துல எனக்கு இப்படிதான் வாய்ப்பு கிடைச்சுது.. மனம் திறந்த தர்ஷா விஜயன்!
சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது என்பது குறித்து நடிகை தர்ஷா விஜயன் மனம் திறந்து பேசியுள்ளார்.
பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யா லீடிங் ரோலில் நடித்துள்ளார்.
3 மாறுபட்ட கேரக்டர்களில் விஜய்...தளபதி 65 அடுத்த அப்டேட்டும் வெளியானது
ஆர்யாவுக்கு ஜோடியாக தர்ஷா விஜயன் நடித்துள்ளார். அடுத்தப்படியாக வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அர்ஜூன் தாஸுக்கு ஜோடியாக நடிக்கிறார் தர்ஷா விஜயன்.
ஃபேஷன் டிசைனிங்
தர்ஷா விஜயன் திண்டுக்கல் மாவட்டம் கன்னியாபுரத்தில் பிறந்தவர். ஃபேஷன் டிசைனிங் முடித்துள்ள தர்ஷா விஜயன், ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அததில் தனக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது குறித்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த படம்தான் காரணம்
அதன்படி, தர்ஷா விஜயன் போதை ஏறி புத்தி மாறி என்ற படதிதன் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானதாக கூறியுள்ளார். அந்த வாய்ப்புதான் தான் சினிமாவை கற்றுக்கொள்ள கிடைத்த பெரிய வாய்ப்பு என்றும் கூறினார். அந்த படத்தில் நடித்ததன் மூலம்தான் மக்களுக்கு எனக்கு நடிக்க தெரியும் என்றும் அதனால்தான், அன்புள்ள கில்லி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றும் கூறினார்.
6 ஆண்டுகள் காத்திருந்தேன்
மேலும் தன்னுடைய குறும்படமான கண்ணம்மா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அதன்மூலம் தான் என்றார். சார்பட்டா பரம்பரை படத்தில் நடிக்க 6 ஆண்டுகள் காத்திருந்ததாகவும், நடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே வேறு எந்த வேலையும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.
தமிழில் பேசி
சார்பட்டா பரம்பரை படத்தில் நடிப்பதற்காக இயக்குநர் பா. ரஞ்சித்தின் அலுவலகத்தில் இருந்து தனக்கு போன் வந்ததாகவும், பின்னர் பா ரஞ்சித்தே தன்னிடம் பேசி தனது வேலைப்பற்றி கேட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரிடம் முழுக்க தமிழில் பேசி இம்ப்ரஸ் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
நல்லா கத்தினேன்
மேலும் தன்னை ஆடிஷனுக்கு அழைத்து தன்னை அடி தொண்டையில் இருந்து கத்த சொன்னதாகவும் கூறியுள்ளார். இப்படி கத்திதான் சார்பட்டா பரம்பரை படத்தில் தான் வாய்ப்பு பெற்றதாகவும் கூறியுள்ளார் தர்ஷா விஜயன்.