Don't Miss!
- News கட்சியையே உடைக்கும் அளவிற்கு கோபம்.. வேலையை தொடங்கிய முக்கிய புள்ளி.. ஆட்டம் காணும் "அந்த" கட்சி?
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டயோசீசன் கூட்டத்தில மோதல்: நடிகைக்கு கொலை மிரட்டல்- 3 பேர் மீது வழக்கு
நாசரேத்: தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் டயோசீசன் கூட்டத்தில் ஏற்பட்ட மோதலில் அதிமுக நடிகைக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதையடுத்து லே செயலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கொம்மக்குடி கோட்டையைச் சேர்ந்தவர் எமி. மாவட்ட முன்னாள் கவுன்சிலரான இவர் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். பல படங்களில் போலீஸ் வேடமேற்று நடித்துள்ளார். தற்போது அதிமுகவில் உள்ளார்.
நாசரேத்தில் திருமண்டல செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற எமி தனது கருத்துகளை எடுத்துக் கூறினார். இதற்கு லே செயலாளர் மோகன், செயற்குழு உறுப்பினர்கள் ஜெயகுமார் ரூபன், ஜான்சன் ஆகியோர் ஆட்பேசனை தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. இது குறித்து எமி நாசரேத் போலீசில் புகார் செய்தார். அதில் தன்னை லே செயலாளர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவித்துள்ளார். சிறப்பு எஸ்.ஐ. சுப்பிரமணியன் விசாரணை நடத்தி நடிகைக்கு கொலை மிரட்டல் விடுத்த லே செயலாளர் மோகன் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தார்.