Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அடேய் அரைவேக்காட்டு முட்டா பயலே.. நெட்டிசனை சரமாரியாக திட்டி தீர்த்த நடிகை ஆர்த்தி!
சென்னை: வரம்பு மீறி பேசிய நெட்டிசனை அவனே இவனே என சரமாரியாக விளாசியுள்ளார் நடிகை ஆர்த்தி.
கோலிவுட்டில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஆர்த்தி. விக்ரம், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார் ஆர்த்தி. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பிரபலங்கள் பலரும் ஹிந்தி தெரியாது போடா, ஐ அம் எ தமிழ் பேசும் இந்தியன் உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற டி ஷர்ட்டுகளை அணிந்து போஸ் கொடுத்து வருகின்றனர்.
நடிகை ரியா சக்கரவர்த்தி கைது.. கடவுள் நம்முடன் இருக்கிறார் என சுஷாந்த் சிங்கின் சகோதரி ட்வீட்!
ஆர்த்தி டிவிட்
அதேநேரத்தில் சில பிரபலங்கள் இந்தி மொழிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். விருப்பமுள்ளவர்கள் விரும்பிய மொழிகளை படிக்கலாம் என தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஆர்த்தி இது தொடர்பாக டிவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.
பிரபலங்கள் ஜாக்கிரதை
அதாவது, நம்ம தமிழ் -தாய் மாதிரி நமக்கு உயிர்மூச்சு. பிறருக்கு அவங்க மொழி அப்படிதான்.
ஆதி மொழி தமிழிலிருந்து தான் எல்லா மொழியும் பிறந்திருக்கு. அதனால பழிப்பது தவறு விரும்பினால் படிப்போம். இந்தி பட வாய்ப்பு வந்தால் டிஷர்ட்டை கழட்டிவிடுவார்கள் பிரபலங்கள் ஜாக்கிரதை என பதிவிட்டிருந்தார்.
வரம்பு மீறி பேசி
அதனை பார்த்த நெட்டிசன் ஒருவர், கலைக்கு மொழி இல்ல மூதேவி, பயிற்று /அதிகார மொழியாக வர கூடாதுனு தான் பேச்சு இங்க.. அரைவேக்காடு என்று வரம்பு மீறி பேசினார்.
போடா அங்கிட்டு
அதனை பார்த்து கடுப்பான நடிகை ஆர்த்தி அவரை சாமாரியாக திட்டி தீர்த்துள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டில், அடேய் அரவேக்காட்டு முட்டா பயலே பயிற்று /அதிகார மொழியா ஆங்கிலம் இருக்கே அது மட்டும் உனக்கு இனிக்குதோ?? இந்தி மட்டும் எதிர்க்கிற உன்ன மாதிரி காண்டு படிச்சவன் எண்ணம் ஈடேராது.. போடா அங்கிட்டு என பதிவிட்டுள்ளார்.