Don't Miss!
- Finance தங்கம் விலை வரலாற்று உச்சம்.. மீண்டும் மீண்டுமா.. எப்பதான் தங்கம் வாங்க முடியும்..?!
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அந்த மனசுதான் சார் கடவுள். மிரட்டும் கொரோனா.. ஊரடங்கால் தவிக்கும் மக்கள்.. உணவு அளித்த பிரபல நடிகை!
சென்னை: ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு வழங்கும் பிரபல நடிகைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னான்டஸ். 2009ஆம் ஆண்டு வெளியான அலாதீன் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஜாக்குலின். அடுத்த ஆண்டு வரை பல படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
இரண்டாவது அலை
இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தனது அறக்கட்டளை மூலம் உணவு வழங்கி உதவி செய்து வருகிறார் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ். கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது.
முழு ஊரடங்கு..
இதனால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு மாநில அரசுகளும் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு என கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
பாலிவுட் பிரபலங்கள் உதவி
ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தினக்கூலியை நம்பியுள்ள தொழிலாளர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். ஏழை மக்களுக்கு உதவும் வகையில் பாலிவுட் பிரபலங்கள் ஏற்கனவே மளிகைப் பொருட்கள், நிதியுதவி மற்றும் உணவு போன்றவற்றை அளித்து வருகின்றனர்.
ஏழை மக்களுக்கு உணவு
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நடிகை ஜாக்குலின் தனது அறக்கட்டளை மூலம் உணவு வழங்கினார். மும்பையில் உள்ள ஏழை மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.
Recommended Video
பாக்கியமாக நினைக்கிறேன்
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜாக்குலின், பசித்தவர்களுக்கு உணவளிப்பதன் மூலம் அமைதி ஆரம்பிக்கிறது என்று அன்னை தெரசா கூறினார். அதன்படி இந்த கடினமான காலத்தில் ஏழை மக்களுக்கு உதவி செய்வதை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன் என கூறியுள்ளார்.