Don't Miss!
- News சென்னையில் அடுத்த 2 நாளைக்கு இந்த சிக்கல் வேற வருதே.. மாநகராட்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- Lifestyle இந்த ராசிக்காரர்கள் திருப்பதிக்கு அடிக்கடி போகக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சபர்ணா போன்றே நிர்வாண நிலையில் மற்றொரு நடிகையின் உடல் கண்டுபிடிப்பு: என்ன நடக்கிறது?
சென்னை: சென்னையில் நடிகை சபர்ணா இறந்து கிடந்தது போன்றே மீண்டும் ஒரு நடிகை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சேலத்தை சேர்ந்தவர் துணை நடிகை ஜெயஸ்ரீ(49). சென்னை சாலிகிராமம் பெரியார் தெருவில் வசித்து வந்தார். திருமணமாகாத அவர் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை
ஜெயஸ்ரீ நகைக்காக கொலை செய்யப்பட்டிருக்கக்கூடும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர் வீட்டு பீரோவில் இருந்த 50 பவுன் நகைகளை காணவில்லை என அவரின் சகோதரர் செல்வராஜ் கூறியுள்ளார்.
மரணம்
ஜெயஸ்ரீ படுக்கையில் நிர்வாண நிலையில் இறந்து கிடந்தார். அந்த அறையில் ஆணுறை ஒன்று கிடந்துள்ளது. இதுவும் போலீசாருக்கு புதிய சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
சபர்ணா
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த சபர்ணாவும் சென்னையில் உள்ள தனது வீட்டில் நிர்வாண நிலையில் தான் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
என்ன காரணம்?
சபர்ணாவின் மரணத்திற்கான காரணமே இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் மேலும் ஒரு நடிகை அதே போன்று மர்மமான முறையில் இறந்துள்ளார்.