நடிகையை வீட்டிற்கு வரவழைத்து ஆடையை அவிழ்க்கச் சொன்ன இயக்குனர்
Recommended Video

மும்பை: இயக்குனர் சஜித் கான் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ரேச்சல் மற்றும் பத்திரிகையாளர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் சஜித் கான் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சலோனி சோப்ரா புகார் தெரிவித்தார். இந்நிலையில் பாலிவுட் நடிகை ரேச்சல் ஒயிட் மற்றும் பத்திரிகையாளர் ஒருவரும் அவர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளனர்.
சலோனி முன்பு நடந்து கொண்டது போன்றே பத்திரிகையாளரிடமும் நடந்துள்ளார் சஜித்.
வீடு
சஜித் கான் அழைத்ததால் அவரை பேட்டி எடுக்க அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார் பெண் பத்திரிகையாளர். அவரிடம் தனது ஆணுறுப்பை காட்டியுள்ளார் சஜித். மேலும் அவருக்கு முத்தமும் கொடுத்துள்ளார். அந்த பெண் அவரை தள்ளிவிட்டு ஓடியுள்ளார். சில ஆண்டுகள் கழித்து சஜிதை பார்த்தபோது அவரை எச்சரித்தபோது நீங்கள் முன்பை விட குண்டாக இருக்கிறீர்கள். உங்களை தொட மாட்டேன் என்று கூறி சிரித்துள்ளார் அவர்.
புகார்
ஹம்ஷகல்ஸ் படத்தின்போது என்னை சஜித் கானின் வீட்டிற்கு செல்லுமாறு ஏஜென்சி ஆட்கள் தெரிவித்தனர். நான் வீட்டிற்கு வர மறுத்ததற்கு என் அம்மா என்னுடன் இருப்பார் என்றார் சஜித். ஆனால் வீட்டிற்கு சென்றபோது பணிப்பெண் கதவை திறந்து என்னை அவரின் படுக்கை அறைக்கு செல்லுமாறு கூறினார் என்கிறார் நடிகை ரேச்சல் ஒயிட்.
ஆடை
ரேச்சலை பார்த்த சஜித் எடுத்த எடுப்பிலேயே அவரின் மார்பகத்தை பேசியுள்ளார். படத்தில் பிகினி காட்சி இருப்பதால் ஆடையை அவிழ்த்துவிட்டு நிற்குமாறு சஜித் ரேச்சலிடம் கூறியுள்ளார். உங்கள் அலுவலகத்தில் வேண்டுமானால் நான் பிகினியில் நிற்கிறேன் வீட்டில் அப்படி செய்ய மாட்டேன் என்று ரேச்சல் தெரிவித்திருக்கிறார்.
பட வாய்ப்பு
என்னை 5 நிமிடத்தில் செடியூஸ் செய்தால் பட வாய்ப்பு தருகிறேன் என்று சஜித் ரேச்சல் ஒயிட்டிடம் தெரிவித்துள்ளார். அதற்கு நான் மனதளவில் தயாராக வரவில்லை என்று கூறிவிட்டு ரேச்சல் அங்கிருந்து கிளம்பிச் சென்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











