என்னுடைய லட்சியமே இதுதான்... மனம் திறந்த ஜோதிகா!
சென்னை: தன்னுடைய லட்சியம் என்ன என்று நடிகை ஜோதிகா மனம் திறந்து பேசியுள்ளார்.
திருமணத்துக்கு பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் நடிகை ஜோதிகா. பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஆக்ஷன், நகைச்சுவை என அனைத்தும் கலந்த ஜாக்பாட் படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்நிலையில் நடிகை ஜோதிகா ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

ஹீரோக்களுக்கு இணையாக
அதில் கூறியிருப்பதாவது, பெரிய ஹீரோக்களுக்கு என்னவெல்லாம் இருக்குமோ அவை எல்லாமே ஜாக்பாட் படத்தில் உள்ளது. ஹீரோக்களுக்கு இணையாக நடித்துள்ளேன்.

எனக்கு பயம் இல்லை
ராட்சசி படத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் இருந்தது. உண்மையைத் தான் படத்தில் காட்டியுள்ளர்கள் என்று பலர் பாராட்டினார்கள். இந்த மாதிரி படங்கள் பண்றதுல எனக்குப் பயம் எதுவும் இல்லை.

என்னுடைய லட்சியம்
படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் என்னுடைய லட்சியம் என்னவென்றால் கதாநாயகர்கள் படங்கள் அளவுக்கு எனது படமும் 100 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று கூறினார்.

எதிர்பார்த்ததை போல்
நம்மிடம் அதிக பணமிருந்தால் அதனை அடுத்தவர்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும். இதுதான் ஜாக்பாட் படத்தின் கதை. படம் எதிர்பார்த்ததை போல் வந்துள்ளது இவ்வாறு நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











