Don't Miss!
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
என்னுடைய லட்சியமே இதுதான்... மனம் திறந்த ஜோதிகா!
சென்னை: தன்னுடைய லட்சியம் என்ன என்று நடிகை ஜோதிகா மனம் திறந்து பேசியுள்ளார்.
திருமணத்துக்கு பிறகு இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார் நடிகை ஜோதிகா. பெரும்பாலும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார்.
அந்த வகையில் ஆக்ஷன், நகைச்சுவை என அனைத்தும் கலந்த ஜாக்பாட் படத்தில் நடித்துள்ளார் ஜோதிகா. இந்நிலையில் நடிகை ஜோதிகா ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
ஹீரோக்களுக்கு இணையாக
அதில் கூறியிருப்பதாவது, பெரிய ஹீரோக்களுக்கு என்னவெல்லாம் இருக்குமோ அவை எல்லாமே ஜாக்பாட் படத்தில் உள்ளது. ஹீரோக்களுக்கு இணையாக நடித்துள்ளேன்.
எனக்கு பயம் இல்லை
ராட்சசி படத்திற்கு எதிர்ப்பும், வரவேற்பும் இருந்தது. உண்மையைத் தான் படத்தில் காட்டியுள்ளர்கள் என்று பலர் பாராட்டினார்கள். இந்த மாதிரி படங்கள் பண்றதுல எனக்குப் பயம் எதுவும் இல்லை.
என்னுடைய லட்சியம்
படம் இயக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் என்னுடைய லட்சியம் என்னவென்றால் கதாநாயகர்கள் படங்கள் அளவுக்கு எனது படமும் 100 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும் என்று கூறினார்.
எதிர்பார்த்ததை போல்
நம்மிடம் அதிக பணமிருந்தால் அதனை அடுத்தவர்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும். இதுதான் ஜாக்பாட் படத்தின் கதை. படம் எதிர்பார்த்ததை போல் வந்துள்ளது இவ்வாறு நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.