Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கேரள நீதிமன்றத்தில் நடிகை ஜோதிர்மயி விவாகரத்து மனு!
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்தவர் ஜோதிர்மயி. மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்தவர் தமிழில் 'தலைநகரம்' என்ற படத்தில் சுந்தர் சி.க்கு ஜோடியாக அறிமுகமானார்.
தொடர்ந்து, நான் அவன் இல்லை, வெடிகுண்டு முருகேசன் உள்பட சில தமிழ் படங்களில் நடித்து இருக்கிறார்.
ஜோதிர்மயிக்கும், கேரளாவை சேர்ந்த நிஷாந்த் என்ற சாப்ட்வேர் எஞ்ஜினீயருக்கும் கடந்த 2004-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகும் ஜோதிர்மயி தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். நிஷாந்த் வளைகுடாவில் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ஜோதிர்மயிக்கும், அவருடைய கணவர் நிஷாந்துக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் ஜோதிர்மயி, கணவரை விட்டுப் பிரிந்தார். ஜோதிர்மயி திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிப்பது பிடிக்காமல் அவர் கணவர் தொடர்ந்து சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது.
இரண்டு பேரும் மனமொத்து விவாகரத்து செய்துகொள்ளும் முடிவுக்கு வந்ததால், ஜோதிர்மயி விவாகரத்து கேட்டு, கேரள குடும்பநல நீதிமன்றத்தில் நேற்று புதன்கிழமை மனு தாக்கல் செய்தார்.