Don't Miss!
- Finance வைப்பு நிதிக்கு அதிக வட்டி கொடுக்கும் வங்கி எது..? முதலீடு செய்ய இதுதான் சான்ஸ்!
- News ஒன்னா இல்ல ரெண்டு ஓட்டு போடனுமா? வாக்குச் சாவடியில் குழம்பிய ராசாத்தி கருணாநிதி..! இது தான் காரணமா?
- Lifestyle மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கொரோனா பாதிப்பு.. பிரதமர் நிவாரண நிதி, பெப்சி, தெலுங்கு அமைப்புக்கு நடிகை காஜல் அகர்வால் உதவி!
சென்னை: கொரோனா பாதிப்பை அடுத்து நடிகை காஜல் அகர்வால், பிரதமர் நிவாரண நிதி மற்றும் சினிமா தொழிலாளர்கள் அமைப்புக்கு நிதி உதவி அளித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. தினசரி சம்பளம் வாங்கும் சினிமா தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உட்பட பலர், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனமான பெப்சிக்கு உதவினர். சமீபத்தில் நடிகை நயன்தாரா ரூ.20 லட்சம் நன்கொடை வழங்கினார். இப்போது நடிகை காஜல் அகர்வால் நிதி உதவி வழங்கியுள்ளார்.
அவர் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சமும் தென்னிந்திய திரைப்பட சம்மேளமான பெப்சிக்கு ரூ.2 லட்சமும் தெலுங்கு திரைப்பட கொரோனா நிவாரண நிதிக்கு ரூ. 2 லட்சமும் மகாராஷ்டிர அரசுக்கு ரூ.1 லட்சமும் வழங்கியுள்ளார். இதுதவிர தான் வசிக்கும் பகுதியில் உள்ள ஏழை, எளியவர்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருட்களையும் வழங்கியுள்ளார்.