Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அம்மா தூக்குப்போட்டு தற்கொலை.. மோசமான நாள்.. வேதனையை பகிர்ந்த நடிகை கல்யாணி !
சென்னை : தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்த நடிகை கல்யாணி தனது அம்மா பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.
நடிகை கல்யாணி பிரபுதேவாவுடன் அல்லி தந்த வானம் மற்றும் ஜெயம் ரவியுடன் ஜெயம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர்.
என்னது கேஜிஎஃப்-3 வர 8 ஆண்டு ஆகுமா?....பிரஷாந்த் நீலுக்கு உள்ள பிரச்சினை இதுதானா?
இவர், சின்னத்திரையில், தாயுமானவர் தொடர் மற்றும் கடற்கரைப் பெண்கள் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மிகவும் புகழ் பெற்றார்.
நடிகை கல்யாணி
நடிகை கல்யாணி 2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தைச் சேர்ந்த மருத்துவரான ரோஹித்தை மணந்தார். இந்த தம்பதியருக்கு 2018 ஆம் ஆண்டு நவ்யா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு சின்னத்திரையிலிருந்து விலகி இருந்த கல்யாணி தற்போது, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
உருக்கமான பதிவு
இந்த நிலையில் நடிகை கல்யாணி தனது அம்மா குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒரு அதிர்ச்சியான தகவல் பகிர்ந்துள்ளார். அதில், அவர் டிசம்பர் மாதம் 24ந் தேதி 2014ம் ஆண்டு எல்லோரும் வருஷம் முடிய போகுதுனு சந்தோஷம் இருந்திருப்பீர்கள். ஆனால் நான் அன்றைய தினம் சந்தித்த விஷயம் பெரிய துக்கமான விஷயம்.
கொடூரமான நாள்
ஒரு சாதாரண நாளாக ஆரம்பித்தது என் வாழ்வின் மிகக் கொடூரமான நாளாக மாறியது அந்த நாள் தான், அம்மாவை ஜிம்மிற்கு அழைத்து செல்ல வீட்டு வாசலில் மணியை பல முறை அடித்தேன் ஆனால், கதவு திறக்கவில்லை. எனக்கு பதற்றம் அதிகமானதால் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே ஓடினேன்.
என் வாழ்க்கை மாறிவிட்டது
அப்போது, என் அம்மா தூக்கில் தொங்கியபடி இருந்தார். அம்மா தற்கொலை செய்த போது எனக்கு வயது 23 தான். அன்று முதல் என் வாழ்க்கை அடியோடுமாறிவிட்டது. என் அம்மா என் சிறந்த தோழி, அவள் இல்லாத உலகத்தை என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என நடிகை கல்யாணி ஒரு நீண்ட நெடிய பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.