Don't Miss!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Lifestyle ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கொரோனாவில் இருந்து மீண்டதாக கூறிய கங்கனா.. பங்கமாக்கிய நெட்டிசன்ஸ்.. புரூஃபையே போட்டுட்டாங்க!
சென்னை: கொரோனாவில் இருந்து மீண்டு விட்டதாக கூறிய நடிகை கங்கனா ரனாவத்தை நெட்டிசன்கள் பங்கம் செய்துள்ளனர்.
Recommended Video
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் உச்சக்கட்டத்தில் உள்ளது. சாமானிய மக்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இணையத்தை கலக்கிய அனுஷ்காவின் சார்லி சாப்ளின் ஃபோட்டோ
கடந்த 2 மாதங்களில் பாலிவுட், கோலிவுட் என திரை பிரபலங்கள் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
நான் அழிப்பேன்
இந்த தகவலை கங்கனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருந்தார். மேலும் "இந்த வைரஸ் என் உடலில் பார்ட்டி பண்ண வந்திருக்கிறது எனக்கு சுத்தமாக தெரியவில்லை. இப்போது எனக்குத் தெரிந்துவிட்டது என்பதால் அதை நான் அழிப்பேன்.
சிறு காய்ச்சல் மட்டுமே
அனைவரும் வாருங்கள் இந்த கொரோனாவை அழிப்போம். இது வெறும் சிறு காய்ச்சல் மட்டுமே. அதிகமான ஊடக வெளிச்சத்தால் மக்களை அச்சுறுத்தி வருகிறது. ஹர ஹர மகாதேவ்" என்று குறிப்பிட்டிருந்தார்.
நீக்கப்பட்ட பதிவு
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்றை சிறு விஷயம் என்று நடிகை கங்கனா கூறியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரது இந்த சர்ச்சைக்குரிய பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியது. உலகையே அதிரவைத்திருக்கும் கொரோனா தொற்றை 'சிறு காய்ச்சல்' என்று குறிப்பிட்டிருந்ததால் அவரின் பதிவு நீக்கப்பட்டதாக இன்ஸ்டாகிராம் விளக்கம் அளித்திருந்தது. உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா நோய்த்தொற்றை சிறு விஷயம் என்று நடிகை கங்கனா கூறியதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அவரது இந்த சர்ச்சைக்குரிய பதிவை இன்ஸ்டாகிராம் நீக்கியது. உலகையே அதிரவைத்திருக்கும் கொரோனா தொற்றை 'சிறு காய்ச்சல்' என்று குறிப்பிட்டிருந்ததால் அவரின் பதிவு நீக்கப்பட்டதாக இன்ஸ்டாகிராம் விளக்கம் அளித்திருந்தது.
நெகட்டிவான கொரோனா
இந்நிலையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்த கங்கனா ரனாவத், தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளதாகவும், ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்றும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்றுவந்த கங்கனா ரனாவத், தற்போது கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துவிட்டதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் வந்துள்ளதாகவும், ரசிகர்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
சிலர் புண்படுகிறார்கள்
மேலும் கொரோனாவை எவ்வாறு எதிர்கொண்டேன் என்பது குறித்து கூற நிறைய உள்ளதாகவும், கொரோனா தொற்றை மரியாதை குறைவாக பேசினால் சிலர் புண்படுகிறார்கள் எனவும் கிண்டலடித்து பதிவிட்டார்.
டெஸ்ட்டிங் ரிப்போர்ட்
ஆனால் தான் கொரோனாவில் இருந்து மீண்டதாக கூறிய தகவலை நெட்டிசன்கள் ஏற்கவில்லை. கங்கனா பொய் சொல்வதாக சமூக வலைதளங்களில் விமர்சித்து வந்தனர். இதனை தொடர்ந்து தனது நெகட்டிவ் ரிப்போர்ட்டையும் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை கங்கனா ரனாவத்.