பல ஹீரோக்கள் என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.. நடிகை கங்கனா ரனாவத் பரபரப்பு!
மும்பை: பல ஹீரோக்கள் தன்னிடம் தவறாக நடக்க முயன்றாக நடிகை கங்கனா ரனாவத் பரபரப்பு புகாரை கூறியுள்ளார்.
பிரபல இயக்குநரான அனுராக் காஷ்யப் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக நடிகை பயல் கோஷ் கூறியிருப்பது பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனுராக் காஷ்யப்க்கு அவரது முதல் மனைவி ஆர்த்தி பஜாஜ் மற்றும் நடிகைகள் டாப்ஸி, ராதிகா ஆப்தே ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பல ஹீரோக்கள்
இந்நிலையில் நடிகை கங்கனா ரனாவத், அனுராக் காஷ்யப் மீதானா பயல் கோஷின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிவிட்டரில் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளார் கங்கனா ரனாவத். அதன்படி அனுராக் காஷ்யப் இதுபோன்ற பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு தகுதியானவர் என்றும் இதுபோன்று பல ஹீரோக்கள் தன்னிடம் தவறாக நடந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் சாதாரணம்
மேலும் அனுராக் பல்வேறு நபர்களுடன் திருமணம் செய்தபோதும் ஒருபோதும் ஒருவருடனும் ஒற்றுமையாக இருந்ததில்லை, அனுராக், பயலுக்கு என்ன செய்தார் என்பது பாலிவுட்டில் ஒரு பொதுவான நடைமுறையாகும், போராடும் வெளி சிறுமிகளை பாலியல் தொழிலாளர்கள் போல நடத்துவது அவர்களுக்கு இயல்பாகவே வருகிறது என்றும் கூறியுள்ளார்.

பெரிய ஹீரோக்கள்
மற்றொரு டிவிட்டில் பயல் கோஷ் என்ன சொல்கிறாரோ அவை பல பெரிய ஹீரோக்கள் மூலம் எனக்கும் நடந்துள்ளது, திடீரென்று வேன் அல்லது ரூம் கதவைப் பூட்டியபின் அல்லது ஒரு பார்ட்டியில் நடன மாடியில் நட்பு நடனம் ஆடும் போது போது திடீரென அவர்களின் பிறப்புறுப்புகளை ஒளிரச் செய்வார்கள், நடன மாடியில் அவர்கள் நாக்கை உங்கள் வாயில் ஒட்டிக்கொண்டு, வேலைக்காக வீட்டிற்கு வாருங்கள் என்பார்கள். ஆனால் உங்கள் மீது படுத்து கட்டாயப்படுத்துவார்கள் என்றும் பதிவிட்டுள்ளார்.
Recommended Video

தினமும் பெண்கள்
மேலும் பாலிவுட்டில் பாலியல் வேட்டையாடுபவர்கள் நிறைந்திருக்கிறார்கள், அவர்கள் ஒரு புதிய ஹாட்டான இளம் பெண்களுடன் தினமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் இதையே இளம் ஆண்களுக்கும் செய்கிறார்கள், எனக்கு மீடூ தேவையில்லை. ஆனால் பெரும்பாலான பெண்கள் அதையே செய்கிறார்கள். இவ்வாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











