Don't Miss!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- News நில அளவை சர்வே.. DTCP ஒப்பந்தபுள்ளி தகுதி வரம்பில் திருத்தம் தேவை: முதல்வருக்கு ரியல் எஸ்டேட் கடிதம்
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இது ஃபேக் நியூஸ்னு யாராச்சும் சொல்லுங்களேன்.. கே.வி. ஆனந்த் திடீர் மறைவால் மனமுடைந்த கார்த்திகா!
சென்னை: இது ஃபேக் நியூஸ்னு யாராச்சும் சொல்லுங்களேன் என நடிகை கார்த்திகா நாயர் மனமுடைந்து பதிவிட்டுள்ள ட்வீட் பலரையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
என்ன கொடுமை இது.. மூத்த நடிகர்
இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான கோ படத்தின் மூலம் கோலிவுட்டில் நாயகியாக அறிமுகமானவர் கார்த்திகா நாயர்.
நடிகை ராதாவின் மகளான இவர் இயக்குநர் கே.வி. ஆனந்தின் மறைவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
கோ படம்
அயன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் 2011ம் ஆண்டு வெளியான படம் கோ. ஜோஷ் எனும் தெலுங்கு படத்தில் 2009ம் ஆண்டு நாயகியாக அறிமுகமான நடிகை கார்த்திகா நாயர் தமிழில் கோ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். கோ படம் கார்த்திகாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.
கே.வி. ஆனந்த் கதை
பத்திரிகை ஒன்றில் புகைப்படக் கலைஞராக பணியாற்றிய தனது வாழ்க்கை அனுபவத்தை கோ படத்தில் நாயகன் ஜீவாவின் கதாபாத்திரமாக உருவாக்கி இருந்தார் இயக்குநர் கே.வி. ஆனந்த். நான்காவது தூணான பத்திரிகை சக்தி மூலமாக ஆட்சி மாற்றம் நடக்கும் என்பதை இந்த படத்தின் மூலம் படமாக்கி வெற்றியும் கண்டார் கே.வி. ஆனந்த்.
Recommended Video
கார்த்திகா அதிர்ச்சி
இயக்குநர் கே.வி. ஆனந்த் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த நிலையில், அவரது மறைவு செய்தி கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமும் ஸ்தம்பித்து போயுள்ளது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், சூர்யா, மோகன் லால் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களின் இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில், கோ படத்தின் நாயகி கார்த்திகா நாயரும் கே.வி. ஆனந்த் மறைவு செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.
What am I waking up to?!? Can someone please tell me this is fake news!! I refuse to believe it
— Karthika Nair (KarthikaNair9) April 30, 2021
ஃபேக் நியூஸ்னு சொல்லுங்க
மேலும், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகை கார்த்திகா நாயர், இந்த அதிர்ச்சியான செய்தி அறிந்து தான் எழுந்தேன். யாராவது ஒருவராச்சும் இது ஒரு ஃபேக் நியூஸ்னு சொல்லுங்களேன் என மிகவும் மனமுடைந்து ட்வீட் போட்டுள்ளார். மேலும், இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைந்தார் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். நடிகர் ஜீவா உள்ளிட்ட பிரபலங்களும் இயக்குநர் கே.வி. ஆனந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.