Don't Miss!
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
கேவலமானவர்கள்.. மாணவிகளை காம எண்ணத்துடன், ஆசிரியர்களால் எப்படி பார்க்க முடிகிறது? விளாசிய நடிகை!
சென்னை: பள்ளியில் மாணவிகள் சந்திக்கும் பாலியல் தொல்லைகளுக்கு நடிகை கஸ்தூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கோவை பள்ளி மாணவி ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் பள்ளி முதல்வர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கம்பெனி ஆர்டிஸ்ட்.. 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம்.. பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றிய கஸ்தூரி!
வேதனை அளிக்கிறது..
இந்த சம்பவத்துக்கு பல்வேறு பிரபலங்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கஸ்தூரியும் மாணவிக்கு அளிக்கப்பட்ட பாலியல் தொல்லைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கஸ்தூரி தெரிவித்திருப்பதாவது, ''கோவையில் 17 வயது சிறுமிக்கு நேர்ந்துள்ள சம்பவம் வேதனை அளிக்கிறது.
கேவலமானவர்கள்..
சிறு பிள்ளைகளை காம எண்ணத்தில் பார்க்கும் அளவுக்கு நம்முடைய சமூகம் மாறி இருப்பது கவலையை தருகிறது. அந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரும் அதை பொறுத்துக்கொள் என்று சொன்ன தலைமை ஆசிரியையும் கேவலமானவர்கள்.
ஏன் ஆசிரியர் தொழில்?
பள்ளிக்கு வரும் மாணவிகளை காம எண்ணத்துடன், ஆசிரியர்களால் எப்படி பார்க்க முடிகிறது? இவர்கள் எதற்கு ஆசிரியர் தொழிலுக்கு வர வேண்டும்? நான் பெரும்பாலும் பேருந்தில் பயணம் செய்துள்ளேன். கூட்ட நெரிசலில் என்னையும் பாலியல் ரீதியாக சீண்டியுள்ளனர்.
Recommended Video
கடுமையான தண்டனை வழங்க வேண்டும்
வீட்டுக்கு வந்ததும் பெற்றோரிடம் தெரிவித்தேன். அவர்கள் இதுபோன்ற சூழலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று கற்று கொடுத்தனர். பெண் பிள்ளைகள் தங்களுக்கு நேரும் அத்து மீறல்களை வீட்டில் கட்டாயம் சொல்ல வேண்டும். கோவை மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அனைவரையும் விசாரித்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும்" இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.