Don't Miss!
- News அடேங்கப்பா.. நம்ப முடியாத வகையில் இந்தியாவின் உள்கட்டமைப்பு! மோடியை பாராட்டிய அமெரிக்க வங்கி சிஇஓ
- Finance ரூ.12,500 முதலீடு செஞ்சா ரூ. 1 கோடி கிடைக்குமா.. செம சான்ஸ்..! சூப்பர் திட்டம்.. மிஸ் பண்ணிடாதீங்க!
- Automobiles இப்பவே 13,000த்த தொட்ருச்சா! இந்தியால இருந்து கொண்டு வந்த காருக்கு பேராதரவு வழங்கும் ஜப்பானியர்கள்!
- Lifestyle கத்திரிக்காயை இந்த மாதிரி ஒருமுறை பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க...
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒன்றேகால் கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ள நடிகர் அஜித்தை நடிகை கஸ்தூரி மனதார பாராட்டியிருக்கிறார்.
Recommended Video
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர். பெரும்பாலான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த த்ரில்லர்.. அருள்நிதிக்கு ஆந்திராவில் இருந்து வருது ஜோடி.. யார் இந்த அவந்திகா மிஷ்ரா?
பெரும் சிரமம்
ஒரு பக்கம், தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மறுபுறம் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சினிமா துறையினர்
இதனை சரிக்கட்டும் வகையில் மத்திய மாநில அரசுகள், தொழிலதிபர்கள் மற்றும் வசதியானவர்கள் அரசு நன்கொடை தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன். இதனை தொடர்ந்து அரசுக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா துறையினர் உதவி வருகின்றனர்.
1.25 கோடி
இந்நிலையில் நடிகர் அஜித் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், முதல்வரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார். மேலும் சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக ஃபெப்சி அமைப்புக்கு 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ரூ. 25 லட்சம்
தமிழ் சினிமாத்துறையை பொருத்தவரை மத்திய மாநில அரசுகளுக்கு நடிகர் அஜித்துதான் அதிக நிதியை வழங்கியிருக்கிறார். ஏற்கனவே ஃபெஃப்சி அமைப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் பணம் வழங்கியுள்ள நிலையில் அவருக்கு அடுத்தப்படியாக நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
|
நீடூழி வாழ்க
நடிகர் அஜித்தின் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் நடிகர் அஜித்தை வெகுவாக பாராட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தல அஜித் அவர்களின் நல்ல மனசுக்கு 1.25 கோடி நன்றி. நீடூழி வாழ்க. அற்புதம் தல அஜித்துக்கு தாராள மனசு..
ஸ்பெஷல் நன்றி
1.25 கோடி ரூபாய் தான் கொரோனா நெருக்கடிக்காக தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இருந்து ஒருவர் வழங்கும் அதிக நிதி என நான் நினைக்கிறேன். ஃபெஃப்சிக்காக 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதற்கக சிறப்பு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி. கடந்த சில நாட்களாக நடிகை கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே டிவிட்டரில் பெரும் வார்த்தைப்போர் நடந்தது குறிப்பிடத்தக்கது.