Don't Miss!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இதுதான் அதிகம்.. அள்ளிக்கொடுத்த அஜித்தை மனதார வாழ்த்திய பிரபல நடிகை!
சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒன்றேகால் கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ள நடிகர் அஜித்தை நடிகை கஸ்தூரி மனதார பாராட்டியிருக்கிறார்.
Recommended Video
சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இதுவரை கொரோனா வைரஸால் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 149 பேர் பலியாகியுள்ளனர். பெரும்பாலான தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த த்ரில்லர்.. அருள்நிதிக்கு ஆந்திராவில் இருந்து வருது ஜோடி.. யார் இந்த அவந்திகா மிஷ்ரா?
பெரும் சிரமம்
ஒரு பக்கம், தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ வசதிகளை ஏற்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. மறுபுறம் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சினிமா துறையினர்
இதனை சரிக்கட்டும் வகையில் மத்திய மாநில அரசுகள், தொழிலதிபர்கள் மற்றும் வசதியானவர்கள் அரசு நன்கொடை தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றன். இதனை தொடர்ந்து அரசுக்கு பொதுமக்கள், தொழிலதிபர்கள் மற்றும் சினிமா துறையினர் உதவி வருகின்றனர்.
1.25 கோடி
இந்நிலையில் நடிகர் அஜித் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், முதல்வரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்கியுள்ளார். மேலும் சினிமா தொழிலாளர்களின் நலனுக்காக ஃபெப்சி அமைப்புக்கு 25 லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
ரூ. 25 லட்சம்
தமிழ் சினிமாத்துறையை பொருத்தவரை மத்திய மாநில அரசுகளுக்கு நடிகர் அஜித்துதான் அதிக நிதியை வழங்கியிருக்கிறார். ஏற்கனவே ஃபெஃப்சி அமைப்புக்கு நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாய் பணம் வழங்கியுள்ள நிலையில் அவருக்கு அடுத்தப்படியாக நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.
|
நீடூழி வாழ்க
நடிகர் அஜித்தின் இந்த உதவியை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் நடிகர் அஜித்தை வெகுவாக பாராட்டியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், தல அஜித் அவர்களின் நல்ல மனசுக்கு 1.25 கோடி நன்றி. நீடூழி வாழ்க. அற்புதம் தல அஜித்துக்கு தாராள மனசு..
ஸ்பெஷல் நன்றி
1.25 கோடி ரூபாய் தான் கொரோனா நெருக்கடிக்காக தமிழ் சினிமா இன்டஸ்ட்ரியில் இருந்து ஒருவர் வழங்கும் அதிக நிதி என நான் நினைக்கிறேன். ஃபெஃப்சிக்காக 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியதற்கக சிறப்பு நன்றி என்றும் பதிவிட்டுள்ளார் நடிகை கஸ்தூரி. கடந்த சில நாட்களாக நடிகை கஸ்தூரிக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையே டிவிட்டரில் பெரும் வார்த்தைப்போர் நடந்தது குறிப்பிடத்தக்கது.